Saturday, November 11, 2017

அனுபவ ஞானம்(7)

அனுபவ ஞானம்(7)

எல்லா உயிரும் இந்த
உலகில்வாழ விரும்புகின்றன.

அவைகள் இந்த உலகிற்கு
வந்த நோக்கத்தை நோக்கி
தங்கள் கவனத்தை
செலுத்துகின்றன.

அதனால் அவைகளும் வாழ்ந்து
மற்ற உயிர்கள் வாழவும்
உதவியாக இருக்கின்றன. 

ஆனால் மனிதன் மட்டும்
அவன் இவ்வுலகிற்கு வந்த
நோக்கத்தை மறந்துவிட்டு.
பிற உயிர்களுக்கு கேடு
விளைவிப்பதிலேயே
தன் ஆயுள் முழுவதும் வீணடிக்கின்றான்.

அதனால்தான் அவனுக்கு வரும்
துன்பங்கள் எதுவும் தீர்க்க
முடியாத அளவிற்கு இன்று
பெருகிவிட்டது.

தான் செய்த தவறுகளுக்கு
பிறர் மீது பழி போடும் குணம்
அவனுக்கு கை வந்த கலையாகி விட்டது.

இல்லாவிடில் கண்ணுக்கு தெரியாத
கடவுள் மீது வெறுப்பை காட்டி புலம்புகிறான்.

அமைதியாக சிந்தித்தால் புரியும்
தவறு யார் மீது உள்ளது என்று. 

No comments:

Post a Comment