Sunday, November 12, 2017

அனுபவ ஞானம்(10)

அனுபவ ஞானம்(10)

அனுபவ ஞானம்(10)

தன்னையே சதா சர்வ காலமும்

நினைக்கும் தன் பக்தனின்

அறிவு,அறியாமை சாத்திரங்களின்படி  வாழ்வு

ஆகியவற்றை கருத்தில் கொண்டு

அருள் செய்வதில்லை.


புற உலகில் பொருள் தேடி

அலையும் மனிதர்கள் உள்ளத்தில்

இருள்தான் குடியிருக்கும்

இருளை விரட்டும்  ஒளிமயமான ஆத்மன்

இதயத்தில் இருக்கும்போது  அதை

வெளியில் தேடி யாது பயன்?



எண்ணங்களால் நிரம்பிய மனமே

நீ கற்பூரம்போல் முழுவதும்

கரைந்தாலன்றி  பேரொளியும்

நிலையான ஆனந்தம் தரும்

இன்ப ஊற்றாம் இறைவனை

உணர இயலாதென்று  உணர். 

No comments:

Post a Comment