Wednesday, August 24, 2016

சரணமும் ஸ்மரணமும்

சரணமும் 
ஸ்மரணமும் 


உப்பை தின்றால்
தண்ணி குடிக்க வேண்டும்

தப்பை செய்தால்
தண்டனை அனுபவிக்க வேண்டும்

 புரவி மீது அமர்ந்தால்
அது உடனே ஒடத்  தொடங்கிவிடும்

அதுபோல் பிறவி எடுத்தால் அது
மரணத்தை நோக்கி பயணத்தை தொடங்கிவிடும்

மரணம் என்னும் குழிக்குள் உடல்
விழுவதற்குள் அதிலிருந்து தப்பிக்கும்
வழியை நாடவேண்டும்

அதற்கு  ஒரே வழி சரணமும்
ஸ்மரணமும்தான்

ஆம் கண்ணணின் திருவடிகளை சரணடைவதும்
அவன் நாமத்தை இடைவிடாது ஸ்மரிப்பதும்தான் 

No comments:

Post a Comment