Saturday, July 23, 2016

நீல மயில் மீது ஏறி ஞாலம் வலம் வந்தவனே!

நீல மயில் மீது ஏறி ஞாலம் வலம் வந்தவனே!


நீல மயில் மீது ஏறி ஞாலம்
வலம் வந்த  முருகா
நீ எனக்கருள வேண்டும்.


காலில்  அடிபட்டு காலாண்டு
படுக்கையில் வீழ்ந்து கிடந்த என்னை
மீண்டும் காலூன்ற  வைத்து
நடமாட வைத்தவன் நீயன்றோ!

பக்தர்களைக் கண்ணிமை போல்
காத்திடும் உந்தன் கருணைக்கு
எல்லை உண்டோ!

ஞானம் தனை நாடி
தேடி ஓடியோடிகளைத்துப்
போன எனக்கு காலம்
தாழ்த்தாது அறியாமை
அகற்றி ஆனந்தம்
அருளல்  வேண்டும்.


No comments:

Post a Comment