Saturday, July 23, 2016

நானும் ஒரு ஓவியன்தான்

நானும் ஒரு ஓவியன்தான் 

அகந்தையின் உருவம்
அரக்கனின் வடிவம்

நம்பிக்கையின் உருவம்
பக்தனின் வடிவம்.

தானே அனைத்தும் என்றான்  தந்தை
அவன் உள்ளம் முழுவதும் அகந்தை

அந்தஇறைவன்  தான் அனைத்தும் என்றான்
அவன் பெற்ற மகன்

என்னே விந்தை. !

கொல்லவும்  துணிந்தான்
மகனை பெற்ற  தந்தை

மகனோ மாலவனை
மனதில் துதித்தான்

மதிகேடனை மர தூணில் இருந்து
வெளிப்பட்டு மாளச்  செய்தான்

அந்த மன்னவனின்  ஓவியத்தை
இவன் வரைந்தான் அனைவருக்காகவும்.



ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

No comments:

Post a Comment