Monday, July 18, 2016

குரு பூர்ணிமா

குரு பூர்ணிமா

குருநாதனுக்கு வணக்கம்
எங்களின் அறியாமையை போக்கி
நிலைத்த ஆனந்தம் தரும்
குருநாதனுக்கு வணக்கம்.

ஒளியாய் இருக்கும் இறைவன்
உருவாய் வடிவெடுத்து நம்
மன இருளை போக்க வந்தான்
குரு வடிவமாய்

குமரனே குருபரனே
குவலயத்தை காக்க வந்த தாயாபரனே
தந்தைக்கு உபதேசம் செய்த ஞான பண்டிதனே
என் போன்ற தறுதலைக்கும் தயை புரிவாய்

கல்லாத எளியோரின் உள்ளம்தான் உன் ஆலயம்
கற்றோரின் உள்ளத்தில் மற்றோர் கொட்டிய
குப்பைகள் குவிந்து கிடைக்கும் சாக்கடை

அகந்தையை  விட்டுவிட்டு உன் பாதம்
பற்றிவிட்டேன்
உன்னை சொல்லாத நாளில்லை
சுடர்மிகு வடிவேலா
அன்போடு வேண்டுகின்றேன்
அருள் கூர்ந்து ஞானம் அருள்வாயே






2 comments:

  1. கார்த்திகை மைந்தனுக்கான
    கவிதை அருமையிலும் அருமை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  2. நன்றி .பாடலையும் கேளுங்கள் .இன்புறுங்கள்.

    ReplyDelete