Monday, November 2, 2015

இரவேது பகலேது


இரவேது பகலேது

இரவேது பகலேது
ஒளி  வடிவான இறைவனை
தன்னுள்ளே கண்டவர்க்கு

இன்பமேது துன்பமேது
அனைத்தும் அவன் செயல்
என்று உணர்ந்தவர்க்கு

துக்கமேது துயரேது
நிகழ்வதனைத்தும் நிமலனின்
லீலை என அறிந்தவர்க்கு

விருப்பேது வெறுப்பேது
பொறுப்பேது பொல்லாங்கு ஏது
தன்னையே அவனிடம்
ஒப்படைத்தவர்க்கு

வாழ்வேது சாவேது
பிறப்பேது இறப்பேது
என்றும் அவன் நினைவில்
வாழ்பவர்க்கு

அன்பால் நிறைந்த இதயம்
அதில்தான் ஒளியான
இறைவன் உதயம்
இதை உணர்ந்தால் மட்டுமே
அல்லலில்லா ஆனந்த  வாழ்வு
சாத்தியம் .


No comments:

Post a Comment