Tuesday, October 27, 2015

இசையும் நானும் (71)

இசையும் நானும் (71)

இசையும் நானும் (71)

இசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய 71 வது காணொளி 

மவுதார்கன் இசை 
தமிழ் பாடல்- படம்- ஆடிபெருக்கு- 
பாடல்- காவேரி ஓரம் கவி சொன்ன காதல் 
அருமையான பாடல்.  வரிகள் -கண்ணதாசன்-இசை எ எம் ராஜா 



Image result for adiperukku tamil movie


காவேரி ஓரம் கவி சொன்ன காதல் 
கதை சொல்லி நான் பாடவா -உள்ளம் 
அலை மோதும் நிலை கூறவா 

அந்த கனிவான பாடல் 
முடிவாகும் முன்னே 
கனவான கதை கூறவா -பொங்கும் 
விழி நீரை அணை  போடவா 

பொருளோடு வாழ்வு 
உருவாகும் போது 
புகழ் பாட பலர் கூடுவார் 
அந்த புகழ் போதையாலே 
எளியோரின் வாழ்வை 
மதியாமல் உரையாடுவார் 

ஏழை விதியோடு விளையாடுவார் 
அன்பை மலிவாக எடை போடுவார் 
இந்த கனிவான காதல் 
முடிவாகும் முன்னே 
கனவான கதை கூறவா -பொங்கும் 
விழி நீரை அணை போடவா

அழியாத காதல்  நிலையானதென்று 
அழகான கவி பாடுவார்
வாழ்வில் வளமான மங்கை
பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார் 

கொஞ்சும் மொழி பேசி வலை வீசுவார் 
பெண்ணை எளிதாக விலை பேசுவார் 
என்ற கனிவான காதல் 
முடிவாகும் முன்னே 
கனவான கதை கூறவா -பொங்கும் 
விழி நீரை அணை போடவா

மணவாழ்வு மலராத மலராகுமா 
மனதாசை விளையாத பயிராகுமா 
உருவான உயிர் அன்பு பறி போகுமா 
உயிர் வாழ்வு புவி மீது சுமை யாகுமா 
சுமையாகுமா .. 

காணொளி இணைப்பு 




No comments:

Post a Comment