Friday, October 9, 2015

இசையும் நானும் (66)

இசையும் நானும் (66)

இசையும் நானும் (66)

இசையும் நானும் (66)

இசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய

66 வது காணொளி

மவுதார்கன் இசை.  

மாதா அம்ருதானந்தமயி பஜன்.





"பந்தம் உண்டு சொந்தமுண்டு"

பந்தமுண்டு சொந்தமுண்டு கண்டுகொண்டேன் நான்-அம்மா
என்றழைக்கும்போது  வரும் பந்தம் நிலைதான் (பந்தமுண்டு)

மணம் வீசும் மலர் நுகர்ந்து உன்னை நினைந்தேன் -மனதில்
அர்ச்சனைகள் செய்து நானும் என்னை மறந்தேன்
தேனும் பாலும் அபிஷேகம் செய்து மகிழ்ந்தேன்
அந்த காட்சி கண்டு எந்தன் உள்ளம் பூரித்திருந்தேன் (பந்தமுண்டு)

தாயாகி தந்தையுமாய் குருவுமான தேவி  இங்கே
நிர்குணமாய் தோன்றுவதைக் கண்டு வியந்தேன்
வழியறியாப் பேதையாக கண்ணீரோடு நின்றேன்
அந்த சங்கரி அழைக்க பிறவி பயனை அடைந்தேன் (பந்தமுண்டு)

அறியாமை இருள் சூழ உழன்று நானும் இருந்தேன்
அன்னை உந்தன் அருளால் கருணைக்கடலில் மிதந்தேன்
அங்கம் அங்கமாக என்னை அர்ப்பணம் செய்தேன்
தாயே நீ ஆள  வேண்டும் தயவைக் காத்திருந்தேன் (பந்தமுண்டு)

காணொளி இணைப்பு 


https://www.youtube.com/watch?v=LzTeBfuiswI&feature=youtu.be







No comments:

Post a Comment