Thursday, September 17, 2015

இசையும் நானும் (53)

இசையும் நானும் (53)

இசையும் நானும் தொடரில்
என்னுடைய 53 வது காணொளி.

மவுதார்கன் இசை.

ஸ்ரீ தியாக ராஜ சுவாமிகளின் கீர்த்தனை

"சீதா கல்யாண வைபோகமே
ராம கல்யாண வைபோகமே"

(சீதா ராம கல்யாணத்தின் சிறப்பே சிறப்பு!)

பவனஜ ஸ்துதி பாத்திர பாவன சரித்ர
ரவி சோம வர நேத்ர ரமணீய காத்ர

வாயுகுமாரனான ஹனுமனால் சேவிக்கப்பட்டவனே!
நற் சரிதனே!
சூர்ய  சந்திரர்களை கண்களாக உடையவனே !
வடிவழகன் 

பக்தஜன பரிபால பரித   சரஜால
பக்தி முக்தித நீல பூதேவ பால

பக்தரை காப்பவன் 
நிறைந்த அம்பராதூணி  உடையவன்  ! போகம் மற்றும் 
முக்தியை அளிப்பவன் 
அகிலத்தை உயிர்களனைத்தையும்   காப்பவன் 

பாமராசுர  பீம பரிபூர்ண காம
ச்யாம  ஜகதபிராம  சாகேத தாம

பாமரர்களான அரக்கருக்கு அச்சத்தை விளைவிப்பவன் 
நிறைவேறிய விருப்பங்களை உடையவன் 
நீல வண்ணன் .உலகிற்கு ஆனந்தமளிப்பவன்

சர்வலோகாதார சமரைக வீர
கர்வமானசதூர கனகாக  தீர

சகல புவனங்களுக்கும் ஆதாரமாய் விளங்குபவன் 
போரில் இணையற்ற வீரன் .கர்வம் கொண்ட மாந்தருக்கு 
எட்டாதவன். மேரு பர்வதத்தையொத்த தீரன் 

நிகமாகம விஹார நிருபம சரீர
நகதராக விதார நாதாலோகாதார

வேத ஆகமங்களில் விளையாடுபவன் 
நிகரற்ற சரீரம் உடையவன் மலைகளை ஏந்தியவன் 
பாவங்களை அகற்றுபவன் .வணங்குபவருக்கு  ஆதாரமானவன் 

பரமேசனுதகீத பவதஜலதி போத
தரநிகுல சஞ்சாத  தியாகராஜனுத
-
பரமசிவனால் துதி பாடப்பெற்றவன் 
சம்சாரம் என்னும் கடலை தாண்ட உதவும் ஓடம் போன்றவன் 
சூரிய குலத்தில் நற்பிறவி எடுத்தவன் .தியாகராஜன் வணங்கும்  தெய்வம் 


காணொளி இணைப்பு 

<iframe width="420" height="315" src="https://www.youtube-nocookie.com/embed/DtNYprdzp4M" frameborder="0" allowfullscreen></iframe>

No comments:

Post a Comment