Friday, August 7, 2015

முருகா முருகா என்று

முருகா முருகா என்று ..



                                                    ஓவியம்-தி ரா .பட்டாபிராமன்.




இன்று ஆடி கிருத்திகை.
வீணான கவலைகளால் ஆடிப்போய்
தவிக்கும்  நமக்கு ஆறுதலைத் தரும்
ஆறுமுகனை வணங்கி அமைதி பெற்று
ஆனந்தமாய் இவ்வுலகில் வாழ்வோம்.

முருகா முருகா என்று
சொன்னால் போதுமே
உன் முயற்சிகள் யாவும்
வெற்றியடையுமே

கந்தா கந்தா என்று
மனதில் அழைத்தால்  போதுமே
உன் கவலைகள்
யாவும் காணாமல் போதுமே

குமரா குமரா என்று கூவி அழைக்க
தாமதியாது ஓடோடி வருவான்
நொடியில் உன் துன்பம் தீர்க்கவே

குன்றுதோறாடும் குமரனை
உள்ள குகையில் வைத்துவிட்டால்
உன்னை  வாட்டும் கவலைகள்
கண  நேரத்தில் காணாமல் போகுமே.



1 comment: