Sunday, August 16, 2015

இதயத்தில் இறைவனை நிறுத்தி விடு

இதயத்தில் 
இறைவனை நிறுத்தி விடு 






                                                        ஓவியம். தி.ரா..பட்டாபிராமன் 



இதயத்தில்
இறைவனை நிறுத்தி விடு

உன்னை வாட்டி வதைக்கும்
கவலைகளுக்கும் அச்சங்களுக்கும்
உடனே விடை கொடு

உன்னை மீளா துன்பத்தில் தள்ளுவது
எது என்று தெரிந்து கொள்ளடா

அவைகள்தான் நம்மை என்றும்
நரகத்தில் தள்ளும்  விருப்பு வெறுப்பு
என்னும் எண்ணங்களடா

அவைகளை நாம்  விட்டுவிட்டால்
என்றும் நம்  வாழ்வில்  வசந்தமடா

உள்ளத்தில்
அன்பை நிறைத்துக்கொண்டு

அண்டி வந்தோர்
அனைவருக்கும் உதவிக்கொண்டு

இருப்பதனைத்தையும்
அனைவரிடமும் பகிர்ந்துகொண்டு
வாழ்பவர் உலகில் தெய்வமடா


காற்றிருக்கும் வரை
கடலில் அலை இருக்கும்
நம் உடலில் மூச்சு காற்று
வந்து போகும் வரை வாழ்வில்
இன்ப துன்பமிருக்கும்

எது வந்த போதும் எல்லாம்
அவன் செயல் என்றுணர்ந்தவர்
உள்ளத்தில் அமைதி இருக்கும்

புறத்தே ஒளி
தருபவன் ஆதவனடா




நம் உள்ளத்தே உறைந்து
ஒளி தருபவன் மாதவனடா


உலகில் வாழ்வாங்கு
வாழ வழி காட்டியவன்
யாதவன்  கண்ணனடா


இந்த உண்மையை
உணர்ந்தவன்தான்
இறைவனின்
உண்மையானதொண்டனடா

3 comments:

  1. ஓவியங்கள் அருமை. எது வந்தபோதும் எல்லாம் நன்மைக்கே என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
  2. காற்றிருக்கும் வரை
    கடலில் அலை இருக்கும்
    நம் உடலில் மூச்சு காற்று
    வந்து போகும் வரை வாழ்வில்
    இன்ப துன்பமிருக்கும்

    எது வந்த போதும் எல்லாம்
    அவன் செயல் என்றுணர்ந்தவர்
    உள்ளத்தில் அமைதி இருக்கும்

    ReplyDelete
  3. பகிர்தல் என்றும் சிறப்பு...

    ஓவியங்கள் அற்புதம் ஐயா...

    ReplyDelete