Monday, August 17, 2015

மாடி முற்றத்திலே தோட்டம் போட்டேன்.(3


மாடி முற்றத்திலே 
தோட்டம் போட்டேன்.(3)

செம்பருத்தியை அடுத்து
ரோஜா செடி வைத்தேன்.

ஆனால் செம்பருத்திபோல்
வேகமான வளர்ச்சி இல்லை

இருந்தாலும் நான்
தளர்ச்சி அடையவில்லை.

தினமும் அதை கண்காணித்து
அதை முன்னேற்ற
முயற்சி எடுத்தேன்.

முயற்சி வீணாகவில்லை
சில வாரங்கள் கழித்து
இலைகள் துளி விட்டன

















அதோடு கூடவே
மொட்டுக்களும்
வெளிர் பச்சை
நிறத்தில் தலை தூக்கின

அழகோ அழகு.
பார்க்க பார்க்க பரவசம்.

















சில நாட்கள் கழித்து மொட்டு மலர்ந்தது.
அழகிய சிவந்த உதடுகள் போல
ரோஜா  மலர் என்னைப் பார்த்து
புன்னகைத்தது.


















அருகே சென்றேன். ரோஜா மலரே
ராஜகுமாரி ,என் ஆசைக் கிளியே
அருகில் வரலாமா என்றேன்.














என் அன்பே
அவசரம் கூடாது
என் பாதுகாவலர்களான
முட்கள் உன்னை தாக்கிவிடுவார்கள்.

நான் உனக்கு சொல்லும்போது
பறித்து அம்பிகைக்கு சூடிவிடு
என்றாள் அவள்

சரி உன் விருப்பப்படியே
என்றேன். நான். (தொடரும்) 

3 comments:

  1. மலைராஜ சுகுமாரிக்கு
    இளரோஜா அலங்காரம்..

    சிவராஜ சியாமளைக்கு
    புதுரோஜா சமர்ப்பணம்!..

    அரசாளும் மீனாட்சிக்கு
    பனிரோஜா அலங்காரம்..

    உலகாளும் காமாட்சிக்கு
    வனரோஜா சமர்ப்பணம்!..

    ReplyDelete
  2. மாடியிலே தோட்டம்
    போட்டாலும் போட்டேன்
    மடியிலே மணக்கும் தமிழ் கவிதை
    மலர்கள் வந்து கொட்டுதடி

    ReplyDelete