Sunday, June 28, 2015

இசையும் நானும் (20) விமரிசனம்

இசையும் நானும் (20) விமரிசனம் 

அனைத்தையும் அவனிடம் விட்டுவிடு என்ற பாடலை 
செவி மடுத்து "அருமை" என்று கருத்து  தெரிவித்தமைக்கு 
முதற்க்கண்  நன்றி. 


என்னுடைய பாடல் உங்கள் ஆய்வுக்கூடத்தில் 
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சில ஆலோசனைகளை 
தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். 


பாடலைக் கேட்கும்போது எனக்குத் தோன்றிய சில யோசனைகள் :

//உன் உள்ளிருக்கும் அவன் ஆணைப்படி செயல்படு //

இந்த வரி சற்றே நீளமாக இருக்கிறது.

எனக்கு எதுகை மோனை இலக்கணம் தெரியாது 
5 ஆண்டுகளுக்கு  முன் எழுதிய கவிதை இது. அதை எங்கோ வைத்துவிட்டேன். நேற்று மதியம் இந்த பாடலின் 4 வரிகள் நினைவில் வந்தது. முயற்சி செய்து  மற்ற வரிகளை பூர்த்தி  செய்து பாடி 10 முறை  எடிட் செய்து  பதிவு செய்து நேற்று இரவு 11 மணிக்கு வெளியிட்டேன். 

//பசித்தோர்க்கு உணவிட்டால் அவன் மகிழ்ந்திடுவான்//

பசித்தோர்க்கு உணவிட்டால் மகிழ்ந்திடுவான் -அவன்
பசித்தோர்க்கு உணவிட்டால் மகிழ்ந்திடுவான்

என்று பிரித்துப் பாடலாம்!

அதே போல

//அதை சரியாக செய்வோர்க்கு கண்ணன் அருளுண்டு//

இந்த வரியிலும்

அதை சரியாக செய்வோர்க்கு அருளுண்டு
கண்ணன் அருளுண்டு..

என்று பாடலாம்

இதெல்லாம் எனக்குத் தோன்றியது. டோசனைதான்.. அதிகப் பிரசங்கித்தனம் என்றால் மன்னிக்கவும். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

தங்கள் யோசனை (டோசனைதான்) கருத்தில் கொள்ளப்பட்டு இதே பாடலை மவுதார்கனில் வாசிக்கும்போது முயற்சி செய்கிறேன். 

உங்கள்   கருத்துக்களை தாரளமாக  தெரிவியுங்கள். வரவேற்கிறேன் 

என்னுடைய "பாவயாமி கோபால  பாலம்"வீடியோ  பார்க்கவில்லையா?

அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். உங்கள் கருத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். 






2 comments:

  1. கண்ணன் அருள் உங்களுக்கு என்றும் உண்டு ஐயா...

    ReplyDelete
  2. கண்ணன் அருள் உங்களுக்கும் உண்டு DD

    ReplyDelete