Saturday, June 27, 2015

இசையும் நானும் (20)

இசையும் நானும் (20)

என்னுடைய இசைப் பயணத்தில் 
நானே இயற்றி பாடிய தமிழ் பாடல் ;

இதோ அந்த பாடல்.

அனைத்தையும்  அவனிடம் விட்டுவிடு
உன் உள்ளிருக்கும் அவன் ஆணைப்படி செயல்படு . (அ )

ஒன்றை ஆக்குவதும்  அழிப்பதும் அவன் லீலை
அது ஏன் என்று ஆராய்வது வீண் வேலை. (அ )

பசித்தோர்க்கு  உணவிட்டால் அவன் மகிழ்ந்திடுவான்
பரிவோடு அருகில் வந்து உன்னைக் காப்பான் (அ )

உழைக்காமல் உண்பது மடமையடா
பிறர் உழைப்பை சுரண்டி வாழ்பவன் மிருகமடா

கடமையை தவறாமல் செய்வது தருமமடா
அதை செய்யாமல் விடுவது கருமமடா  (அ )

கடமையைக் காலத்தில் செய்தால் பலனுண்டு
அதை சரியாக செய்வோர்க்கு கண்ணன் அருளுண்டு

இதை நீ  என்றும் நினைவில் கொண்டு
வாழ்க வளமுடன் பல்லாண்டு  (அ)


பாடலின் இணைப்பு கீழே;
https://youtu.be/bmVemsz64sg

2 comments:

  1. அருமை ஐயா... தங்களின் இசைப்பயணம் மென்மேலும் சிறக்கட்டும்... வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. அருமை.

    பாடலைக் கேட்கும்போது எனக்குத் தோன்றிய சில யோசனைகள் :

    //உன் உள்ளிருக்கும் அவன் ஆணைப்படி செயல்படு //

    இந்த வரி சற்றே நீளமாக இருக்கிறது.

    //பசித்தோர்க்கு உணவிட்டால் அவன் மகிழ்ந்திடுவான்//

    பசித்தோர்க்கு உணவிட்டால் மகிழ்ந்திடுவான் -அவன்
    பசித்தோர்க்கு உணவிட்டால் மகிழ்ந்திடுவான்

    என்று பிரித்துப் பாடலாம்!

    அதே போல

    //அதை சரியாக செய்வோர்க்கு கண்ணன் அருளுண்டு//

    இந்த வரியிலும்

    அதை சரியாக செய்வோர்க்கு அருளுண்டு
    கண்ணன் அருளுண்டு..

    என்று பாடலாம்

    இதெல்லாம் எனக்குத் தோன்றியது. டோசனைதான்.. அதிகப் பிரசங்கித்தனம் என்றால் மன்னிக்கவும். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete