Friday, January 30, 2015

எத்தனை முறை கூறினாலும்?

எத்தனை முறை கூறினாலும்?

எத்தனை முறை கூறினாலும்
ஏற்கமாட்டார் இவ்வுலக மாந்தர்

இறைவன் ஒருவனே என்ற உண்மையை

ஒன்றுதான் பலவாக விரிந்து
பரந்து பிரிந்து காட்சியளிக்கிறது
என்று உண்மையை உணர்ந்தோர்
உரைத்தார். எழுத்தில் எழுதியும்
வைத்தார்.

அந்தோ ! இந்த உண்மையை உணரும்
சக்தியில்லை உணர்ந்தோரின்
மொழியையும் கேட்பதில்லை.இவ்வுலக
மாந்தர்களுக்கு 

தான்  வணங்கும் வடிவமே சக்தியுள்ள தெய்வம் மற்ற
தெய்வங்களெல்லாம் அதற்குள் அடக்கம் என்று
வீணே பிதற்றி திரிகின்றார்.

அனைத்துமாய் இருப்பதும், அதற்குள்ளே இருந்து
இயக்கும்  சக்தியாய் இருப்பதும் அந்த
பரம்பொருளே என்றும் ஒன்றை ஆக்குவதும்
நிலை நிறுத்துவதும்அதை  தன்னுள்
லயமாக்கி கொள்வதும் அந்த வஸ்துவே
என்று கணக்கற்ற மகான்கள் இவ்வுலகிற்கு வந்து
விளக்கிய பின்பும் விளங்கிக் கொள்ளாத கூட்டம்.

அறியாமையால் தெளிவற்று, பிளவுற்று
சண்டையிட்டு மாயும் கூட்டம்.

மாயையிலிருந்து விடுபட வழி அறியாக் கூட்டம்.
பிறந்து பிறந்து மடியும் கூட்டம்.


அறியாமை என்னும் சேற்றில்தான்
அறிவு என்னும் தாமரை முளைத்து மலரும்.
அதற்கு ஹரி -யாதவனைச்
சரணடைவதை தவிர வேறு  வழியில்லை.

1 comment: