Friday, January 16, 2015

பகுத்தறிவு என்றால் என்ன? (1)

பகுத்தறிவு என்றால் என்ன? (1)

இந்த தலைமுறையினருக்கு
பகுத்தறிவு என்றால் தந்தை
பெரியார்தான் நினைவு வரும்

ஏனென்றால் அவர்தான் மக்களிடையே
நிலவி வந்த ஏற்ற தாழ்வுகளுக்காக  எதிராக
போராடியவர் என்று திராவிட கட்சிகள்
தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றன.

அதற்க்கு அவர்கள் கையில்
எடுத்துக்கொண்ட ஆயுதம்
அஹிம்சை வழியில், அமைதியாக தங்களின்
கொள்கைகளை கடைபிடித்துக் கொண்டு
இறைவனை அடையும் நோக்கம் ஒன்றையே
முழு நேர வாழ்க்கை முறையாக கொண்டு
வாழ்ந்து வந்த பிராம்மண சமுதாயத்தினரை இழிவு படுத்துவதும்
அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து அவர்களை
அவர்களின் இருப்பிடங்களிலிருந்து விரட்டியதும் தான்

ஆனால் அவர்கள் எதிர்பார்த்த சமரச சமுதாயம் வர வில்லை
வரவும் வர வாய்ப்பில்லை. இன்று தமிழ் நாடு மதம், ஜாதி, இனம்
நிறம் என அனைத்து அடிப்படையிலும் பிரிந்து ஒன்றுக்கொண்டு சண்டையிட்டு மடிந்துகொண்டிருக்கின்றன.

வெளியே பார்ப்பதற்கு தாங்கள் அனைவரும் தமிழர்கள் என்று மக்களிடையே
புளுகிக் கொண்டு , தொடர்ந்து பிராமணர்களை ஆரியர்கள் என்றும் பார்ப்பான் என்றும், நாட்டில் எந்த சம்பவம் நடந்தாலும், பார்ப்பனர்களும், பார்ப்பநீயமும்தான் காரணம் என்று தொடர்ந்து பொய்களை திரும்ப உரக்கக் கூவி தமிழ்  நாட்டின் வளங்களைக் தொடர்ந்து கொள்ளை அடித்து தங்கள் பையை நிரப்புவதிலும்,குறியாய் இருக்கின்றன

பிராம்மணர்கள் தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிரானவர்களாக
சித்தரித்து அவ்வப்போது  செல்லரித்துப்போன தங்களின் கொள்கைகள்
இன்னும் உயிரோடு இருப்பதாக காட்டிக்கொண்டு திரிகின்றன

வாழ்வாதாரங்களை இழந்த பிராம்மண  சமூகம்
தங்களின் உயரிய நெறிகளை கடைபிடிக்க இயலாமல்
வேறு வகையான வாழ்வாதாரங்களைத் தேடி வேறு மாநிலங்களுக்கும்,
உலகில் உள்ள மற்றநாடுகளுக்கும் சென்று பாரம்பரியமான
தங்கள் குல வழி வந்த உயரிய சிந்தனைகளாலும் அறிவின் தெளிவாலும்
தங்களைக் காத்துக்கொண்டு, தாங்களும் உயர்ந்து தங்கள் வாழும் நாட்டிலும்
தங்களின் உயரிய கலாச்சாரங்களை பாதுகாத்துக்கொண்டு, மற்ற நாட்டு மக்களுக்கும் தங்களின் பெருமையை உணரும்படி செய்ததுடன், அவர்களையும் அந்த நன்மையை பெற்று மேன்மையடையச் செய்தனர்.  

அவ்வப்போது தோன்றிய மகான்களின் வழி காட்டுதலைக்  கொண்டு
இந்த பொய்ப் பிரசாரங்களை கண்டு அஞ்சாமல் தங்களை நெறிப்படுத்திக் கொண்டு தாங்களும் நல்வழியில் நின்றுகொண்டு மற்றவர்களுக்கும் அதை
கடைபிடிக்கவும் செய்து வருவது பாராட்டிற்குரியது.

இன்னும் வரும்


No comments:

Post a Comment