Tuesday, December 23, 2014

மாலவனின் மாதமாம் மார்கழியில் மலர்ந்த சிந்தனைப் பூக்கள்

மாலவனின் மாதமாம் மார்கழியில் மலர்ந்த 
சிந்தனைப் பூக்கள் 

மார்கழி மாதத்தை மாலவனின்
மாதமாக நம்மை எல்லாம் கொண்டாட
வைத்த மாதரசி ஸ்ரீ ஆண்டாளைப் போற்றுவோம்.



Image result for sri andal images

உறங்குவதே வாழ்க்கையின் குறிக்கோள்
என்று கிடந்த நம்மையெல்லாம் தட்டி
எழுப்பி அரங்கனின் புகழ் பாட வைத்த
அந்த அன்புத் தெய்வம்  நம் நெஞ்சத்தில்
நிலையாகக் குடிகொள்ளட்டும்

நம் மனதை இறைவனின்
திருவடிகளில் செலுத்த நம்மை ஊக்குவிக்கட்டும்




நஞ்சு தடவப்பட்ட புறப்பூச்சுக்களை
விட்டொழிப்போம்

நஞ்சை உண்டு நம்மையெல்லாம் காப்பாற்றிய
நசுண்டேஸ்வரனை நாளெல்லாம்
நன்றியுடன் நினைப்போம்.
ஓவியம்  வித் கிராபிக்ஸ்- தி.ரா. பட்டாபிராமன்

ஐம்புலன்கள் என்னும் ஐந்து தலை நாகம்
வடிவில் நம்மையெல்லாம் துன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும்
காளிங்கன் என்னும் நாகத்தின் தலை மீது தன் கால்களை வைத்து
அடக்கிய காலிங்க மர்த்தனனின்  கால்களை கெட்டியாக
பிடித்துக்கொள்வோம்.

மதுவின் மயக்கத்தில் மயங்கி மற்றவர்களுக்கு துன்பம் அளித்த
மது என்னும் அரக்கனைக் கொன்றவனும் நேர்மையற்ற வழியில்
தர்மத்திற்கு புறம்பாக பாண்டவர்களின் சொத்தை அபகரித்த
கௌரவர்களின் கூட்டத்தை அழித்தவனுமாகிய மது சூதனை
மனதில் நினைத்து நம் மனதில் மதுவிற்கும்,சூதிற்க்கும்
இடம் கொடாது நம்மை காத்துக் கொள்வோமாக

1 comment:

  1. ஐம்புலன்கள் விளக்கம் புதுமை ஐயா...

    ReplyDelete