Saturday, November 15, 2014

மனம் என்னும் குப்பைத்தொட்டி

மனம் என்னும் குப்பைத்தொட்டி

இந்த உலகத்தில் குப்பைகள்
இல்லா  இடமில்லை

மண்ணில் எந்த குப்பையைப்
போட்டாலும் புவிஅன்னை
அதை உரமாக மாற்றி உயிர்களும்
தாவரங்களும் உயிர் வாழ வகை செய்திடுவாள்

ஆனால் நம் மனதில் குவிந்துள்ள குப்பைகளை
நாம் அறிவதில்லை ,அறிய முடிவதும் இல்லை
அவற்றை அகற்றும் வழியும் தெரியவில்லை

உண்மையை சொல்லவேண்டுமெனில் அதை
அகற்றும் எண்ணமே பலருக்கும் இல்லை.

மாறாக பல ஒவ்வொரு பிறவியிலும் சேர்த்து வைக்கப்பட்ட
குப்பைகள் அப்படியேநம்மோடு  தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன

போதாக்குறைக்கு நம் ஐந்து புலன்கள்  மூலம் ஒவ்வொரு கணமும்
கணக்கின்றி குப்பைகள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன

எல்லாம் பொய்கள். அவைகள் நம் மனம் என்னும் பொய்கையில்
தங்கி ஊறி அழுகி  நாற்றமெடுத்துக்கொண்டிருக்கின்றன

அதன் வெளிப்பாடுகள்தான் ஆசைகள், கோபம், பயம், விருப்பு வெறுப்பு
வஞ்சகம், சூது, பொறாமை போன்ற செயல்கள்.

நம் உடல் சுத்தத்திற்கு  நாம் செலவு செய்யும் நேரமும் காசும் பல
நூறைத் தாண்டுகிறது தினமும்.

ஆனால் மனதில் குவித்துள்ள
குப்பையை அகற்ற சில நொடிகளைக் கூட நாம் ஒதுக்குவதில்லை.

நாம் பிறரின் வாழ்க்கையையே தான் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்.

நம்  மனதில் இருக்கும், வந்து போகும் எண்ணங்களை
கண்காணிப்பதில்லை .அதனால்தான் நமுடைய ஆன்மீக வாழ்வில்
எந்த முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து பிறவிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்க்கு முற்றுபுள்ளி இந்த பிறவியிலாவது வைக்கவேண்டும் என்ற
ஒரு எண்ணம் மனதில் விதைக்கப்பட்டால்தான் அது முளைத்து வளரும்.

பகவான் ரமணர் உபதேசித்து நம்மிடையே வாழ்ந்து காட்டினார்.


இக்கணத்திலிருந்தே   நம் மனதில் தோன்றும் எண்ணங்களை
கண்காணிக்க  தொடங்குவோம்.அப்போதுதான் நம் மனதிற்கு
புரியத் தொடங்கும் நமக்கும் மேலே ஒருவன் இருக்கின்றான், அவன் நம்மை கண்காணிக்க தொடங்கிவிட்டான் என்ற எண்ணம் ஏற்படும்.

நாம் ரமணரைப்  போல்   ஆக முடியாது என்ற எண்ணத்தை தூக்கி  எறியுங்கள்.
நாமும் அந்த அற்புத நிலையை அடையவேண்டும் என்று தினமும் எண்ணுங்கள். கண்டிப்பாக நடக்கும் .அதில் எந்தவிதமான ஐய்யமும்
தேவையில்லை 


வள்ளுவர் கூறியுள்ளதுபோல் உள்ளம் வெளுக்க வேண்டுமென்றால்
உண்மை பேசினால்தான் முடியும் வேறு மாற்று வழி இல்லை
என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒரு உண்மையாவது பேசவேண்டும், உண்மையாக நடக்கவேண்டும் என்று ஒரு குறிக்கோள் வைத்துக்கொண்டே செயல்பட்டால்
அது சாத்தியப்படும்

2 comments:

  1. ஒரு தினத்துக்கு ஒரு உண்மையாவது பேசுவது என்கிற டீல் ரொம்பச் சுலபமாய் இருக்கிறதே...!

    ReplyDelete
  2. முயற்சி திருவினையாகும்.
    நிற்கின்ற இடத்திலேயே நின்றுகொண்டு புலம்பாமல் ஒரு அடி எடுத்து வைத்தால்போதும். வண்டி ஓடத்துவங்கிவிடும்.

    ReplyDelete