Saturday, September 27, 2014

குறை ஒன்றுமில்லா கோவிந்தன்

குறை ஒன்றுமில்லா கோவிந்தன்






நிலமகளும் நீர்மகளும் அருகிருக்க 
குன்றின் மேல் நின்று கண்குளிர
காட்சி தரும்  கருணை தெய்வம் 
குறை ஒன்றுமில்லா கோவிந்தன்

மறைகள் போற்றும் மாலவன்
நம் குறைகளைக் காணாது செய்து
நம்மை உயர்நிலைக்கு கொண்டு
செல்லும் தூயவன்

அடியார்க்கு அடியவன்  அனைத்து
உயிர்க்கும் ஆதாரமானவன்
அன்போடு அழைத்தால் அக்கணமே
வந்து காப்பவன்

மனதில்நிறைந்துள்ள பொய்யும்
புரட்டையும் விரட்டி விட்டு
புரட்டாசி மாதம் தன்னில் அவன்
நாமம் சொல்லி அவனின்
தரிசனம்  கண்டு ஆனந்தம்அடைவோம்

கோவிந்தன்  நாமம்  சொல்லி கொண்டு
திருப்பதிக்கு பாத யாத்திரை சென்றால்
உடலின் எடையும் குறையும் மனதைக்
கப்பியுள்ள இறுக்கமும்  நீங்கும்

வேங்கட மலையின் உச்சியில் நிற்பவனும்
அனலாய் நம் உடலில் பரவி நம்
உடலுக்குள் இருந்துகொண்டு நம்மை
வாழ்விப்பவனும் அவன்  ஒருவனே.

நம் உயிர்க்கு ஆதாரமாய் விளங்கும்
பாதார விந்தனின் பாதங்களை
எந்நேரமும் சிந்திப்போம் .என்றென்றும்
இன்பமாய் இவ்வுலகில் வாழ்வோம்.



No comments:

Post a Comment