Saturday, September 20, 2014

நினைவுள்ள வரை என் நெஞ்சில் இருக்கட்டும் உன் நாமம்

நினைவுள்ள வரை என் நெஞ்சில் 
இருக்கட்டும் உன் நாமம்


எங்கும் நிறைந்தவனே எழில் 
வடிவம் கொண்டவனே

அண்டத்து உயிர்களைக் காக்கும்
ஆதவனின் ஒளியாய் இருக்கின்றாய்


பரம பக்தன் பிரஹலாதன்  
வேண்டுகோளை ஏற்று  பாரினில் 
நரசிங்கனாய் அவதரித்து
ஆணவம் கொண்டு அலைந்த
ஹிரணியனை வதம் செய்தாய் 



எங்கும் நிறைந்தவனே எழில் 
வடிவம் கொண்டவனே கண்ணின் 
ஒளியாய் திகழும் கண்ணனே 





சொல்ல சொல்ல திகட்டாது உன் நாமம் 
சொல்லிக்கொண்டே இருந்தால் போதும் 
என்றும் எமை அண்டாது காமம் 

கர்ம வலையில் சிக்கித் தவித்த 
எமக்கு எளிதில் விடுபடும் 
வழியைக் காட்டினாய் 

பற்றின்றி செயல்பட்டால் பாவ புண்ணியங்கள்  
உம்மை பற்றாது என்று பார்த்தன் மூலம்
பாரதப் போர் தொடங்கு முன்பு பறை சாற்றினாய்

உன் திருவடியைப் பற்றியவர்க்கு
இகத்திலும் பரத்திலும் பயமில்லை ,
நிலையான இன்பமுண்டு 
என்றுரைத்தாய். 

நினைவுள்ள வரை என் நெஞ்சில் 
இருக்கட்டும் உன் நாமம்

.உந்தன்  கவின் வடிவினைக் கண்டு ஆனந்தம் 
அடையட்டும் என் கண்கள் .கண்ணில் 
ஒளியிழந்தாலும் இதயத்தில் ஒளியாய் 
நிலைத்து நீங்காஇன்பம்  தந்திடுவாய் 

1 comment:

  1. நானும் இணைந்தே வேண்டுகிறேன்.

    ReplyDelete