Sunday, August 24, 2014

கேள்வி பிறந்ததுஅன்று. பதில் கிடைத்தது இன்று

கேள்வி பிறந்தது அன்று ..
பதில் கிடைத்தது இன்று 

ஆதி  சங்கரர் அடிஎடுத்துக் கொடுத்தார்
நானே பிரம்மம் என்று

பிரம்மம்தான் சத்தியம்
மற்றவை எல்லாம் மாயத்தோற்றம் என்றார்.

ஜீவனும் பிரம்மமும் ஒன்றே
என்றார்.

அதைத் தொடர்ந்து பல ஆசார்யர்கள்
அதை மறுத்து பல கொள்கைகளை
மக்கள் மத்தியில் பரப்பினார்கள்.

இன்றும் அவைகள் தொடர்ந்து கொண்டே
இருக்கின்றன வாழையடி வாழையாக

நானே பிரம்மம் என்பதை அருமையாக
பொறுமையாக தெளிவாக அனைவரும்
அறிந்து கொள்ளும் வகையில்
'நான் யார் " என்ற தத்துவத்தை தானே
உணர்ந்து அதன் வழி நின்று நமக்கெல்லாம்
வாழ்ந்து காட்டிய பெருமை

Photo


பகவான்
ரமணரையே சாரும்.

எதையும் வெறுக்காமல் ,ஒதுக்காமல்
இருக்கும் இடத்திலேயே கடமைகளை
செய்துகொண்டு இறை நிலையில் வாழலாம்
என்று எளிய தமிழில் உபதேசங்களை
தந்தார் பகவான் ரமணர்.

மனதில் எண்ணங்கள் எங்கிருந்து வருகிறது  என்பதை 
விசாரித்தால் போதும் உனக்கு பிரம்மத்தை 
அறிந்திட "விசா "கிடைத்துவிடும் என்ற 
ரகசியத்தை போட்டு உடைத்தார். 

அவர் தாள் பணிவோம்
அவர் காட்டிய வழியில் சென்று
அரிதாய் கிடைத்த பிறவியை
பயனுள்ளதாக்குவோம்.

ஜெய் ஸ்ரீ ரமணா



1 comment:

  1. கடமையைச் செய்வோம்
    பலன் தன்னால் கிட்டும்
    நன்றி ஐயா

    ReplyDelete