Wednesday, August 20, 2014

பகவான் கண்ணன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறான்?

பகவான் கண்ணன் நம்மிடம் 
என்ன எதிர்பார்க்கிறான்? 

பகவான் நம்மிடம்
என்ன எதிர்பார்க்கிறான்?

கடையிலிருந்து வாங்கி
வைத்த வெண்ணையா?
அல்லது எண்ணையில் பொறித்த
தின்பண்டங்களா ?

அவை எல்லாம்
நமக்குத்தான் .

அவன் பேரைச்சொல்லி
நாம் சாப்பிடத்தான்
சாப்பிடும்போதாவது
அவன் நாமத்தை நாம் உச்சரிக்க
நம் முன்னோர்கள் செய்து வைத்த ஏற்பாடு





கன காம்பரதாரி கண்ணன் நம்
தூய உள்ளத்தைத்தான் கேட்கிறான்

அவனிடம் காட்டும்  அன்பை நம்மை
சுற்றியுள்ள அனைத்து உயிர்களிடமும்
காட்டவேண்டும் என்று எதிர்பார்க்கிறான்

பரிபூரண சரணாகதியைதான்
எதிர்பார்க்கிறான்

அது இருந்தால்போதும் 
 மற்றவையெல்லாம்
தானே நம்மிடம் வந்து சேரும்

No comments:

Post a Comment