Wednesday, June 25, 2014

அன்பே சிவம் என்றால் ?

அன்பே சிவம் என்றால் ?




ஓவியம்: தி.ரா .பட்டாபிராமன் 



அன்பே சிவம் என்றால்
அவன் அடியார்க்கு அடியவர்
ஆனதினாலன்ரோ?

அன்பே சிவன் என்றால் அவன் ஏன்
அழிக்கும் கடவுளானான் ?

அவனை அறியவொணாது
நம்மை தடுக்கும் அகந்தையை
அழிப்பதினாலன்றோ ?

உடல்,மனம், புத்தி என்னும்
மூன்றையும் கடந்து அவனை
உணராது தடுக்கும் ஆணவம்
கன்மம் மாயை ஆகிய மூன்றையும்
அழித்து அருள் செய்வதினாலன்ரோ ?

அன்றொருநாள் அமரரையும், அரக்கர்களையும்,
நஞ்சிலிருந்து காப்பாற்ற நெஞ்சில்
நஞ்சை கொண்ட நஞ்சுண்டேஸ்வரா

இன்று இவ்வுலகில் நெஞ்சினில் நஞ்சை
வைத்து கண்ணிலும், வாக்கிலும்
நஞ்சைக் கக்கும் இவ்வுலக மாந்தர்களிடமிருந்து
அபலைகளைக் காக்க மறந்ததேனோ?

தீயவர்களை அழித்து
நல்லவர்களைக் காக்கும்
உன் செயல்.

ஆனால் இன்றோ தீயவர்கள் பெருகிவிட்டனர்
இவ்வுலகில். காரணமின்றி சக மக்களை
சகட்டு மேனிக்கு கொன்று குவிக்கின்றனர்.
இந்நிலை  மாற அருள் புரிய வேண்டும்
என்னாட்டவர்க்கும் இறைவனாகிய
தென்னாடுடைய சிவ  பெருமானே.



4 comments:

  1. ஓவியம் சிறப்பு ஐயா...

    பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஓவியம் அழகோ அழகு ஐயா
    நன்றி

    ReplyDelete