Tuesday, June 10, 2014

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் 







வைகாசி விசாகத்தில்
வையகத்து மக்களை காக்க
வையகத்துக்கு வந்தவன்

பொய்யில்லா உள்ளத்தில்
அமர்ந்துகொண்டு
பொங்கி வரும் புனல்போல்
பேரானந்தத்தை தருபவன்

ஆறுதலை கொண்டவன்
அன்புடன் நினைப்போற்கு
ஆறுதலைத் தருபவன்

முருக முருகா முருகா
என்று கூவியழைத்தால்
மும்மலங்களையும் அகற்றுபவன்

இக பர சுகங்களை அளிப்பவன்
இன்னல்கள் நீக்கி
இன்ப வாழ்வை அளிப்பவன்

நினைவிருக்கும்  வரை சொல்லுவோம்
சொல்வோம் அவன் நாமம்
நிலையான அவன் பதம் பெற்றிட




2 comments:

  1. ஆறுதலை கொண்டவன்
    அன்புடன் நினைப்போர்க்கு
    ஆறுதலைத் தருபவன்!..

    முருகா சரணம்.. சரணம்..

    ReplyDelete
  2. ஆறுதல் தரும் ஆறுமுகத்தான்.

    ReplyDelete