Friday, May 16, 2014

தாமரைப்பூவில் அமர்ந்தவளே

தாமரைப்பூவில் அமர்ந்தவளே


தாமரைப்பூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே… செந் (தாமரை)
சுந்தரி பார்வதி பாமகளும்
சொந்தமுடன் நினைக்கும் பூமகளே
உன்பாதம் எந்நாளும் தஞ்சமே திருமகளே
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே.. செந் (தாமரை)
அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே
அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே
செல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாலே
உலகமெல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே (தாமரை)

இந்த பாடலை இன்னிசை குயில் சுசீலா குரலில் கேட்க 

http://www.5abimusic.com/term/thamarai-poovil-amarnthavale

2 comments:

  1. பிடித்த பாடல்.

    பூ புகைப்படத்தில் படம் இணைக்கப்பட்டுள்ளதா?

    ReplyDelete