Monday, January 6, 2014

கல்யாணம், உபநயனம் செலவைக் குறைக்கலாம்-பெரியவா

கல்யாணம், உபநயனம்  
செலவைக் குறைக்கலாம்-பெரியவா 



யார் கேட்கிறார்கள் அவர் உபதேசத்தை
.உபனயனதிற்க்கே சில லக்ஷம்

கல்யாணத்திற்கு
பல லக்ஷம்  செலவு செய்கிறார்கள்.

உபநயனம் செய்வதற்கு
சில நூறு ரூபாய்களே போதும்.
ஏனென்றால் அது ஒரு சடங்கு
அவ்வளவுதான்.
அதை  தகுதியுடையவர்களைக்
கொண்டுதான் செய்ய வேண்டும்.
ஆனால் இன்று அது இல்லை.
அதனால்தான் இத்தனை
அலங்கோலமும் இன்று.


வாழ்க்கையில் உண்மையான 
அன்பு எந்த நிலையிலும் இல்லை. 

அதனால்தான்
ஒருவொருக்கொருவர் மதிப்பு இல்லை.

எல்லாம் வெளி வேஷம்.

அவர்கள் போடும் வேஷத்தைத்தான்
கோயிலில் இறைவன் என்று
நினைத்துக் கொண்டிருக்கும் வடிவங்களுக்கும்
போட்டு மகிழ்கின்றனர் இந்த மூடர் கூட்டம்

அன்புதான் சிவம். 
அன்பின் வடிவம்தான் கண்ணன் 
ஆற்றலின் வடிவம்தாம்தான் முருகன் 
எளிமையின் வடிவம்தான் கணபதி 
கருணையின் வடிவம்தான் சக்தி 


இதை உணராது தோற்றங்களுக்குதான்
மதிப்பு. மரியாதை.

அதனால்தான் உலகில் உண்மை இல்லை
எல்லாவிடங்களிலும் பொய்
என்ற பேய்தான்  ஆட்சி செய்கிறது.
அகந்தைதான் ஆதிக்கம்  செலுத்துகிறது.

ஆடம்பரமும் ஆசைகளும்
போலி கௌரவமும் தான் நிரம்பிக்கிடக்கிறது
அனைவரின் உள்ளங்களிலும்.

அனைவரின் உள்ளங்களிலும் பொறாமை
என்னும் அழுக்காறு  கரை புரண்டு ஓடுகிறது

பேராசை என்னும் பெரு நெருப்பு பற்றி
எரிந்து கொண்டிருக்கிறது. அது பார்வையிலும்,
சொல்லிலும் செயலிலும் வெளிப்பட்டு கொண்டிருக்கிறது




ஆனால் சீவி சிங்காரிப்பதர்க்கும் செல்போனில் பேசுவதற்கும், இன்னும்  பல வெட்டி வேலைகளுக்கும் கேளிக்கைகளுக்கும், குடித்து,புகைத்து அழிவதற்கும் ஆயிரமாயிரமாய் செலவழிக்கும் இந்த மனிதக் கூட்டம் பிச்சை போடுவதற்கு மட்டும் தேடுகிறார்கள் சில்லறைக் காசுகளை 

.கையில் சில்லறை இல்லை போய்யா என்று ஏசுவதொடு மட்டுமல்லாமல் உழைத்து சாப்பிடக்கூடாதா என்ற ஏளனப் பேச்சு வேறு. . 

இறைவன் நினைத்தால் இருவரும் இடம் மாற எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பதை யாரும் உணருவதேயில்லை. 



திருப்பதி உண்டியலில் போட  மட்டும்
அந்த துளையில் போடும் அளவில் உள்ள
சிறிய காசுகளை தேடுகிறது கைகள்

ஆனால் அவன் மட்டும்
இந்த தருமவானுக்கு கேட்பதை எல்லாம்
அள்ளி அள்ளி கொடுக்கவேண்டும்.
என்ன பேராசை பாருங்கள் !

தானம் கேட்டு வருபவர்களை தரம்கெட்ட
வார்த்தைகளை சொல்லி துரத்தி அடிக்கிறார்கள்

தர்மம் செய்தால் செய்த
தொகைக்கு ரசீது கேட்கிறார்கள்.

செய்த தருமத்திற்கு வருமான வரி விலக்கு
இருக்கிறதா என்று கேட்கிறார்கள்.

கோயிலில் விளக்கைப் பொருத்தினால்
தங்கள் பெயரைப் பொருத்தி
விளம்பரம் தேடுகிறார்கள்

மண்டையைப் போட்ட அடுத்த கணமே .
இவன் பெயர் மறைந்து "எங்கே பாடி " என்று
அனைவரும் கேட்கப்போவதை மறந்து

ஒரு மரம் வாழ்நாளில் கோடிக்கணக்கான பழங்களை இலவசமாக கொடுக்கிறது. அது ஒரு பழத்தைக் கூட தனக்காக உண்பதில்லை. 



ஆனால் நன்றி கெட்ட  சுயநலம் கொண்ட
மனித பதர்கள் அதற்க்கு தண்ணீர்கூட ஊற்றுவதில்லை.

மாறாக வீட்டைகட்டுவதர்க்காகவும்,
சாலையை அகலப்படுத்துவதர்க்காகவும்
இரக்கமின்றி வெட்டி சாய்க்கிறார்கள்.



அது போதாதென்று தன்னிடம் உள்ளதனைத்தையும்
இந்த உலகத்திற்கு கொடுக்கும் மரத்தை ,
தன்னை வெட்டி வீழ்த்தியவனின் வீட்டு வாசற்க் காலாய்



தன்னைக் கொலை செய்த அவன்  படுத்துறங்க கட்டிலாய்
உட்கார நாற்காலியாய் , உணவு உண்ணும்போது
அமர மணையாய் .
அவன் இறுதி யாத்திரை போகும் போகும் போது
சுமக்கும் மூங்கிலாய்.
இறுதியில் அவன் உடலை எரித்து
சாம்பலாக்க விறகாய் தன்னையே 
அழித்துக் கொள்ளும் மரத்தை
 மட்டமாக பேசுகிறார்கள்
 இந்த மதி கெட்ட  மனிதர்கள்.

அவர்கள்  சக மனிதர்களைப் பார்த்து "ஏன் மரம் போல் நிற்கிறாய்? என்று ஏளனமாக பேசி தன்  நன்றியை வெளிக்காட்டுவது அனைவரும் தவறாது செய்வது

தவறுகள் ஒவ்வொரு கணமும்  
செய்துகொண்டே இருக்கிறார்கள். 
மாட்டிக்கொண்டால். நீதிபதியிடம் 
தாங்கள் தவறே செய்யவில்லை என்று 
வக்கீல் வைத்து வாதாடுகிறார்கள். 

நீதிபதி தண்டனை அளித்தாலும்
அதை ஏற்றுக்கொள்வதில்லை.
தொடர்ந்து வழக்காடிக்கொண்டே இருக்கிறார்கள்.

 எங்கு தப்பித்தாலும் தர்ம தேவதையான 
,நம் மனதிற்குள் குடிகொண்டுள்ள வாசுதேவனிடமிருந்து
 யாரும் தப்பிக்க முடியாது. 

அவன் தண்டனை கொடுப்பது யாருக்கும் தெரியாது. 
அவன் எப்படி, எந்த நேரத்தில் அவன் தண்டனையை எவ்வாறு நிறைவேற்றுவான் என்று தெரியாது. 
என்பதை மூடர்கள் உணர வேண்டும். 

கண்ணனை மறவாதீர்.
கண்போன்று நம்மைக் காக்கும்
குருநாதரின் உபதேசங்களைக் மனதில் கொள்வீர்.
 மன நிம்மதியான
மகிழ்ச்சியான வாழ்வைப் பெறுவீர்.

pic.courtesy-google images 

6 comments:

  1. அன்புதான் சிவம்.
    அன்பின் வடிவம்தான் கண்ணன்
    ஆற்றலின் வடிவம்தாம்தான் முருகன்
    எளிமையின் வடிவம்தான் கணபதி
    கருணையின் வடிவம்தான் சக்தி

    ஆழ்ந்த பொருள் நிரம்பிய
    உணர்வு ததும்பும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. // தன் நன்றியை வெளிக்காட்டுவது அனைவரும் தவறாது செய்வது...///

    அருமையான விளக்கம்.... நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அருமையான படங்கள் + விளக்கங்கள்.

    நன்றி என்பதைத்தவிர நான் என்ன புதிதாகச்சொல்ல?

    எல்லாம் அவங்களே சொல்லிட்டாங்க.

    தங்கள் பதிவென்னும் காட்டினில் இன்று நல்ல பலத்த மழை ! ;)))))

    ReplyDelete
  4. இதே ‘வரவும் செலவும்’ என்ற தலைப்புத்தான் அங்கு என் பதிவிலும் இன்று.

    3 தனித்தனிப்பதிவுகள் தங்களின் கருத்துக்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

    உடனே வாங்கோ.

    பதிவுகளை கலகலப்பாக்கித் தாங்கோ.

    அடுத்த 2 பதிவுகளுடன் இவனின் தொல்லை உங்களை விட்டு விலகி விடும், வெள்ளரிப்பழத்தினை அந்தச் செடியின் காம்பு விட்டுவிட்டு நகர்வதுபோல. ;)

    அன்புடன் VGK

    ReplyDelete