Monday, November 25, 2013

"மாதவா! மதுசூதனா!":


"மாதவா! மதுசூதனா!": 






கரந்தை ஜெயக்குமார் has left a new comment on your post "மாதவா! மதுசூதனா!": 

நிலையில்லா
இவ்வுடலின்
உள்ளத்தால்தானே
உலகில்
எங்கெங்கும் பிரச்சனைகள்
நன்றி ஐயா


உள்ளத்தில் உள்ளே
கள்ளம் புகுவதை
தடுத்தால் போதும்

உள்ளதைக் கொண்டு
களித்து  வாழும் மனம் கொள்ள
கற்றுக் கொண்டால் போதும்

அனைத்து உயிர்களிடமும்
அன்பு செய்ய
பழகிக் கொண்டால் போதும்

எல்லாமும் தனக்கென்று எண்ணி
வாழாமல் இருப்பதும் இருப்பதை
அனைவரிடமும் பகிர்ந்துகொண்டு
வாழ தெரிந்துகொண்டால் போதும்

இவ்வுலகமே
உன்னைப் போற்றும்.

உன் இதயத்தில் அமைதி
ஆட்சி  செய்யும்

அமைதியை தேடி
எங்கும் அலைய வேண்டாம்

பிறரின் அமைதியைக் கெடுக்காமல்
இருந்தால் போதும் .உன் உள்ளத்தில்
ஆழத்தில் உள்ள  அமைதி
மண்ணில் உள்ள  நீரூற்றுப்போல்
தானே சுரந்து பெருகி வரும்.
 

இந்த உலக வாழ்வு
இனிக்க இவை போதுமையா
கரந்தையாரே!

4 comments:

  1. /// அனைத்து உயிர்களிடமும்
    அன்பு செய்ய
    பழகிக் கொண்டால் போதும்... ///

    இது ஒன்றே போதும்...

    வாழ்த்துக்கள் ஐயா....

    ReplyDelete
    Replies
    1. நல்லதோர் சிந்தனைகளை
      நாள்தோறும் நன்மக்களின்
      மனங்களிலே விதைத்திடவே
      மனம் கொண்டேன்

      விதைக்கின்றேன் சில
      ஆண்டுகளாய்

      உங்களைப் போன்ற சிலரின்
      உள்ளத்தில் மட்டும் முளைக்கின்றது
      வளர்கிறது
      மணம் பரப்புகிறது.

      வாழ்த்துக்கள் DD

      Delete
  2. //பிறரின் அமைதியைக் கெடுக்காமல் இருந்தால் போதும் .
    உன் உள்ளத்தில் ஆழத்தில் உள்ள அமைதி மண்ணில் உள்ள நீரூற்றுப்போல் தானே சுரந்து பெருகி வரும்.//

    ஆஹா, அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete