Tuesday, August 27, 2013

என்ன புண்ணியம் செய்தாய் வேய்ந்குழலே?

என்ன புண்ணியம் செய்தாய் 
வேய்ந்குழலே?



வேய்ந்குழலூதும் கண்ணா
ஒரு சாதாரண மூங்கில்
உன் கொவ்வை  செவ்வாயில்
தவழ அது என்ன
புண்ணியம் செய்தது?



அண்ணன் பலராமனுடன்
கண்ணன்  விருந்தாவனத்தில்
பரந்த பசும்புல்வெளியில்
பசுக்களை மேயவிட்டான்.

கையிலெடுத்தான் குழலை
இனிய கீதம் இசைக்கலானான்

எங்கும் பரந்த இறைவனைப்போல்
எங்கும் நிறைந்த காற்று கண்ணன்
வாயின் மூலம் மூங்கிலால் செய்யப்பட்ட
குழலில் நுழைந்து வெளியேறி
காற்றில்  கலந்தது
இனிமையான
தெய்வீக இசையாக

நாத வடிவமான பரம்பொருளாம் கண்ணன்
இசைக்கும் ஓசை இசையாகி நிலத்திலும்,
நீரிலும், ஆகாயத்திலும், ஒவ்வொரு
உயிரின்  ஆன்மாவிலும்
ஊடுருவத் தொடங்கியது.

அவரவர் கடமைகளில் ஈடுபட்டிருந்த
ஆண்களும் பெண்களும் இசையை
கேட்ட மாத்திரத்தில் தங்களை
இழந்தனர்

.தங்கள் செய்து கொண்டிருக்கும்
பணியை  மறந்து சிலைபோல்
இசை வந்த திக்கை
நோக்கி நின்றனர்

பசுமையான் புல்லை
ருசித்து தின்று கொண்டிருந்த
 பசுக்கள் புல்லை மேய்வதை
நிறுத்திவிட்டன.




இசையில் மயங்கிய அவைகள்
சித்திரத்தில் உள்ள உருவங்கள்போல்
போல் நிலைத்து அசையாது நின்றன.

பசுக்கள் அசையாது நின்றதை
கண்ட ஆயர்கள்
இசை வந்த திசையை நோக்கி
தங்கள் பார்வையை செலுத்தினர்



அங்குமிங்கும் துள்ளி திரிந்து
ஓடிக் கொண்டிருந்த புள்ளி மான்களும்
 தங்கள் ஓட்டத்தை நிறுத்திவிட்டு
ஓசை வந்த திசையை  நோக்கி
கண்ணன் அருகில் சென்று நின்றன

ஆங்காங்கே பறந்து சென்றுகொண்டிருந்த
பறவைக் கூட்டங்கள் வானில் தாங்கள்
பறப்பதை விட்டுவிட்டு கண்ணனின்
குழலோசை கேட்கும்
இடத்திற்கு விரைந்தன

 

சப்தமிட்டுக்கொண்டு
ஓடிக்கொண்டிருந்த ஆறுகளும்
தெய்வீக கீதத்தை இசைக்கும்
கண்ணனின் திருவடிகளை வருட
அவனை நோக்கி வந்தன





தோகை  விரித்தாடும்
மயில்களோ தாங்கள் ஆடிய
ஆட்டத்தை நிறுத்திவிட்டு
கோபாலனின் இசைகேற்ப
தங்கள் நடனத்தை மாற்றி
ஆடத் தொடங்கின

( இன்னும் வரும் )

This tamil poem  is based on the article What is so special about Krishna. written by Mr. V.S. Krishnan published in vsk_tiruppugazh@yahoo.com

Pic. courtesy-google images 


    

1 comment:

  1. அழகோவியமான அற்புதப் பாடல் தான்.

    //வேய்ந்குழலூதும் கண்ணா
    ஒரு சாதாரண மூங்கில்
    உன் கொவ்வை செவ்வாயில்
    தவழ அது என்ன
    புண்ணியம் செய்தது?//

    ஆஹா, உண்மை. உண்மை. நெகிழ்ந்து போனேன். ;)))))

    ReplyDelete