Thursday, June 13, 2013

தியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(74)

தியாக ராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(74)






ஸ்ரீ இராமா
என் மீது அன்பு காட்டு!

கீர்த்தனை(228)(மேள-27)-நெநருஞ்சரா  நாபைநி -
ராகம்-சிம்ஹவாஹினி-தாளம்-தேசாதி 

ஸ்ரீராமா!

என் மீது அன்பு காட்டு
நான் உன் அடியவன் அல்லவா?

சனகர் முதலிய யோகியர் குழாம்
தொழும் பாதனே!

அயோத்தியில் வசிப்பவனே!
பக்தர்களை போஷிப்பவனே!

அன்னை பிதா, குரு, தெய்வம் அனைத்தும்
நீஎன்று  எப்போதும் உன்னை நம்பியிருக்கும்
நான் தத்தளிக்கும்போழுது எனக்கு புகலிடம்
காட்ட மாட்டாயா?

தியாகராஜனை பரிபாலிக்கும்
குணசீலனே!


ஒரு பக்தன் அவன் வணங்கும் தெய்வத்திடம்தான்  
அவன் மனதில் தோன்றும்  குறைகளை சொல்லி 
முறையிடவேண்டும். 

அப்போதுதான் வழி பிறக்கும். 
கதவுகள் திறக்கும். 

அன்னை ,பிதா,குரு தெய்வம் என்று  
அனைத்துமாக அவனே  இருக்கும்போது 
இந்த உலகில் மற்றவர்களிடம் தனித்தனியே
முறையிடுவதால் எந்த பயனும் இல்லை.

அயோத்தியில் வசிப்பவனே 
என்று ஸ்வாமிகள் முறையிடுகிறார். 

அயோத்தி எங்கிருக்கிறது.?

 ஒரு ஜீவனுக்கு அயோத்தி எது?

அதன் ஆத்மா உறையும் 
இடம்தான் அயோத்தி 

அதன் ஆத்மா உறையும் இடம் எது?

அந்த ஜீவன் தங்கும் உடல். 
அந்த உடலின் உள்ளே இருக்கும் உள்ளம். 
அதில் உறையும் ஆத்மராமன்தான். 
இருக்கும் இடம்தான் அயோத்தி 
என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

ஆனால் அதை விடுத்து புற உலகில்
ஒரு இடத்திற்காக சண்டையிட்டு
மடிகின்றனர்.மூட  மக்கள்

எங்கும் நிறை பரப்ரம்மம் 
ராம பிரம்மம் 
அப்படி இருக்க 
அவனை தன் உள்ளத்தில் 
தேடுவதுதான் உண்மை பக்தி.

ஆனால் மனதில்  காமம், குரோதம்,
முதலிய அசுரர்களின் ஆட்சி நடப்பதால்
பக்தர்கள் ராமனை புற உலகத்தில் 
தேடுகின்றனர்

புறத்திலும்  ராம ராஜ்ஜியம் இல்லை 
அகத்திலும் ராம ராஜ்ஜியம் இல்லை.

புற உலகில் இனி ராம ராஜ்ஜியம் 
அமைய வாய்ப்பில்லை.

ஆனால் பக்தர்கள் தன் உள்ளத்திலாவது 
ராம பக்தி சாம்ராஜ்யம் 
அமைத்துக்கொள்ள தடையில்லை
முயற்சி செய்தால் .

அதற்கு  ராம நாமத்தை இடைவிடாது 
ஜெபிப்பதுதான் சிறந்த எளிமையான வழி. 


pic.courtesy-google images.

6 comments:

  1. /// அந்த ஜீவன் தங்கும் உடல்... அந்த உடலின் உள்ளே இருக்கும் உள்ளம்... ///

    நல்ல விளக்கம் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஆனால் பக்தர்கள் தன் உள்ளத்திலாவது
    ராம பக்தி சாம்ராஜ்யம்
    அமைத்துக்கொள்ள தடையில்லை
    முயற்சி செய்தால் .

    அதற்கு ராம நாமத்தை இடைவிடாது
    ஜெபிப்பதுதான் சிறந்த எளிமையான வழி.

    ஆழ்ந்த கருத்துகள் அமைந்த
    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. .பாராட்டுக்கு நன்றி.

      Delete
  3. //ஸ்ரீராமா! என் மீது அன்பு காட்டு; நான் உன் அடியவன் அல்லவா?//

    //எங்கும் நிறை பரப்ரம்மம் ராம பிரம்மம்; அப்படி இருக்க அவனை தன் உள்ளத்தில் தேடுவதுதான் உண்மை பக்தி.//

    ஆஹா, அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete