Monday, April 1, 2013

GLORY TO SRI SAINATH


GLORY TO SRI SAINATH 

























அரிது அரிது 
மானிடராய் பிறத்தல் அரிது 

நாம் பண்ணிய புண்ணியங்களினால்
இறைவன் மனமுவந்து அளித்த 
பரிசு மானிட பிறவி 

கிடைத்தற்கரிய 
இந்த மானிட பிறவியை 
மீண்டும் இந்த உலகில் பிறந்து 
துன்பப்படாதிருக்கும் வழியை
நாடி பெறவேண்டும் 

பிறப்பும் இறப்பும் ஒரு 
இடைவெளி இல்லா வளையம் 

இந்த வளையத்திலிருந்து 
வெளிவருவது மிக கடினம். 

உண்மையில் நாம் பிறப்பையும் 
இறப்பையும் கடந்த ஆன்மா 

அழியும் இந்த இந்த உடல் என்னும் 
கூட்டில் சிக்கி கொண்டதால் 
நாம் ஆன்மா என்பதை மறந்துவிட்டோம். 

ஆன்மா அழியாது. என்றும்
அதன் சக்தி குறையாது. 
ஆனால் அது பிறவிதோறும் 
தாங்கும் உடல் அழியும் 

அணுக்களால் இணைந்த 
இந்த உடலில் ஜீவன் வெளியேறிய 
பின் மீண்டும் அணுக்களாக சிதறி போய்விடும். 

ஒவ்வொரு பிறவியிலும்
நாம் முற்பிறவிகளில் சேர்த்துக்கொண்ட 
வினைகளோடு ஒவ்வொரு பிறவிகளிலும்
வினைகளை அதிகரித்துகொண்டே போகிறோம். 

வினைகளின் சுமை கூட கூட
ட நாம் அஞ்ஞானத்தில் மூழ்கி போய்
நம்முடைய ஆன்ம ஸ்வரூபத்தை 
அறவே மறந்து போகின்றோம். 

வினைகளை அனுபவிக்கவே 
பிறவிகள் போதுவதில்லை. 

நாம் செய்யும் செயல்கள் 
நம்முடைய எண்ணங்களை பொறுத்து 
நல்லவைகளாகவோ அல்லது
தீயவைகளாகவோ அமைகின்றன 

இந்த சுழலிலிருந்து
நாம்  விடுபடாவிட்டால்
நம் பிறவிகளுக்கு முடிவே இல்லை 

இறைவன் நமக்கு
பல கோடி இன்பங்களை நாம் 
கேளாமலே அளித்திருக்கிறான்.
அவைகளை அனுபவிப்பதில் 
தவறில்லை 

ஆனால் அதற்காகத்தான் பிறவி 
என்று நினைத்தோமானால் 
அது நமக்கு தீரா 
தொல்லைகளைதான் தரும்.

ஏனென்றால் இவ்வுலக
இன்பங்கள் நிலையற்றவை
ஒரு மரணம் அனைத்திற்கும் 
முற்றுப்புள்ளி வைத்துவிடும்   


இந்த உலகத்திற்கு நாம் வருவதன் 
முக்கிய நோக்கம் நம்மை 
படைத்தவனை அறிந்துகொள்வதே. 

நம்மை படைத்த இறைவன் 
நம் இதயத்திலே நம்மோடு 
எப்போதும் இருக்கிறான். 

அவனை தேடி நாம் எங்கும் 
செல்ல வேண்டியதில்லை. 

ஆனால் நம் மனம் 
அவனை நாடுவதே இல்லை
அது ஏன்? 

இன்னும் வரும்

2 comments:

  1. /// ஆனால் அதற்காகத்தான் பிறவி
    என்று நினைத்தோமானால் ///

    இதைத் தான் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்...

    தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. புரிந்துகொள்ளாதவர்கள்
      புரிந்துகொள்ளவேண்டி.
      புரியும்படி எழுதுகிறேன்.
      ஆனால் கொள்வார்
      யாரும். இல்லை

      Delete