Wednesday, April 24, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (20)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (20)





























இராம நாமத்தை 
பஜனை செய்யலாகாதா?

பிரம்மன்,உருத்திரன் 
முதலியோருக்கு 
ஆத்ம மந்திரமாகிய 
இராம நாமத்தை 
பஜனை செய்யலாகாதா?

பத்தரை மாற்று பொன்னாடை
அரையில் அழகுடன் விளங்க 
புன்சிரிப்பு தவழும் 
அவனுடைய திருமுகத்தை
நினைத்து பஜனை செய்யலாகாதா?

அவனுடைய 
சிவந்த உதடுகளையும் 
முத்துப்போன்ற   
பல் வரிசையையும்
 பளபளவென்று மின்னும் 
இரு கன்னங்களையும்
சதா எண்ணி 
பஜனை செய்யலாகாதா?

மனக் கற்பனையிலுதித்த 
சம்சார கடலை கடக்க உதவும் 
தாரக மந்திரமாகிய இராம நாமத்தை 
இத்தியாகராஜனின் 
விண்ணப்பத்தை கேட்டாவது 
பஜனை செய்யலாகாதா? 

(கீர்த்தனம்-(327)-பஜன சேய ராதா ராம -ராகம்-அடாண-தாளம்-ரூபகம்)

தான் பெற்ற இன்பம் பெருக  
இவ்வையகம் என்ற  எண்ணத்தில் 
அனைவரையும் ராம் பக்தியில் ஈடுபடுமாறு 
ஸ்வாமிகள் வேண்டுகிறார். 

மேலும் ஆதி சங்கரரின் கொள்கையாகிய
பிரம்மமே சத்தியம் இந்த உலகம்
மனத்தால் கற்பிக்கப்பட மாயை
என்பதையும் அதிலிருந்து மீள
இராம நாமத்தை ஜபம் செய்யலாகாதா 
என்றும் ஸ்வாமிகள் 
நமக்கு தெளிவுபடுத்துகிறார். 

2 comments:

  1. கேள்விகள் படித்து திகைத்தேன்... பிறகு தெளிந்தேன்... வியந்தேன்...

    ReplyDelete