Saturday, April 27, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(27)


தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(27)




அனுபம குணாம்புதீ- என்ற இந்த பாடல் அடாண ராகத்தில் அமைந்த அற்புதமான கீர்த்தனை

இந்த கீர்த்தனத்தை கேட்டவர்கள் இந்த பாட்டில் உள்ள கம்பீரத்தினை உணர்ந்திருப்பார்கள். கேட்டவுடன் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் கிருதி  

அதன் விளக்கத்தினை பார்ப்போம் 

நிகரற்ற குணக்கடல் நீயே என்று 
திடமாக நம்பி உன்னை பின்பற்றுபவனாக ஆனேன்

ஆனால் நீ என்னைக் 
காப்பாற்றாமலே இருக்கிறாயே?

மனுவம்சத்தின் நாயகனே!
என் எளிமையை விவரித்து 
உனக்கு எழுதியனுப்ப எனக்கு யாருளர் ?

இதை கேள்
உன் தயை  வருமாறு செய்வாய்.

ஜனக மகாராஜனின் மருமகனே?
ஜானகியின் தாயாகிய பூமிதேவியை போல் 
பொறுமையுள்ளவனே?

என் தந்தையே!
கால தாமதம் இனி போதும்,
போதும்,அய்யனே 

பொன்னாடை அணிந்தவன் 
என்னைப் பார்த்து உனக்கு கபடமேன்?

இவ்வுடலேன்னும் செல்வத்தையே 
நான் சதா நினைக்கின்றேனா?

சகலலோக நாதனே!
கனவிலும் நீயே என் தெய்வம்
(திரௌபதிக்கும் ,கோபியருக்கும்) அவர்களது பக்திக்கு வசப்பட்டு நீ ஆடையளித்து  காப்பாற்றியதை நான் கேள்வியுற்றிருக்கிறேன்

அரச வம்சமேனும் கடலில் உதித்த சந்திரன் நீ
தேவரைக் காப்பவன் கஜேந்திரனை ரட்சித்தவன்
தியாகராஜனால் வணங்கப்பெறுபவன் 
(கீர்த்தனை-அனுபம குணாம்புதீ-(321)-ராகம் அடாண -தாளம்-ஜம்ப)

இறைவனை நம்பவேண்டும்.
பல சோதனைகளுக்கு பக்தனை ஆட்படுத்திதான் 
அவன் அருள் செய்வான். 

ஆனால்  பக்தனின் மனதில் 
அவ்வப்போது அவ நம்பிக்கைகள் எழத்தான் செய்யும்
இருந்தும் அந்த அவநம்பிக்கை நீண்ட நேரம் 
 நீடிக்க செய்யாமல் நனவிலும் கனவிலும் 
அவனையே நினைத்து அவனிடமே
 நாம் தஞ்சம் புகுந்தால்தான் 
இறைவனின் அருளை பெறமுடியும் என்று 
சுவாமிகள் இந்த கீர்த்தனையில் தெளிவாக்குகிறார். 
 

No comments:

Post a Comment