Tuesday, March 12, 2013

யோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும் (4)


யோகிகளும் 
மகரிஷிகளும் ஞானிகளும் (4)


அருள்வனத்தில் என்ன இருக்கிறது?(2)







துஷ்டர்களை அழித்து தூயவர்களை காக்கும் துரித நிவாரணி துர்க்கையே துன்பம்  துடைத்து இன்பம் அளிக்கும் இனியவளே என்றும் என் மனம்
உன் திருவடியை பற்றி நிற்க அருள் செய்வாயே




















வேங்கடவனாய் நின்று அருள் பாலிக்கும் ஈசனே
வேண்டிய வரங்களை தந்திடும் ஸ்ரீனிவாசனே
அருள்மாமணியின் உள்ளத்தில் உறையும் நேசனே
அருள் வனத்தில் நித்திய வாசம் செய்யும் அலர்மேல்மங்கை பாகனே
இருவினையகற்றி இகபரசுகம் தந்து எங்களை காப்பாயே








கருணையின் உருவெடுத்து தர்மத்தின் வழிநின்று
தவறு செய்தவர்களை தண்டித்து தவறுணர்ந்து
மண்டியிட்டவர்களை மன்னித்து தவம் செய்தவர்களை வாழ்வித்து அருல்வனத்தில் கோலோச்சும் ராமனே  அடிபணிந்த எமக்கு
நித்தியானந்த பதம் அருள்வாயே








அன்ன பூரணியாய் அஷ்ட அயிஸ்வர்யங்களையும் தருபவளாய் ஆனந்தவல்லியாய் அண்டி வந்தோரின் அல்லல்களை அகற்றுபவளாய் அருள் வனத்து அரசியாய் ஞான ஒளியாய் பிரகாசிக்கும் அன்னை லலிதாம்பிகையே ராஜராஜேஸ்வரியே என்றும்
என் மனம் உன் திருவடியை விட்டு
அகலாதிருக்க அருள் செய்வாயே




(இன்னும் வரும்) 
இது குறித்த மேலும் பல தகவல்களுக்கு
கீழ்கண்ட வலை இணைப்பில்
விவரம் அறிந்துகொள்வீர்.
http://www.arulvanam.org/

1 comment:

  1. படங்களும் மிகவும் அருமை...

    புதிய பகிர்வை வாசிக்க அழைக்கிறேன்...

    ReplyDelete