Tuesday, March 12, 2013

யோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும் (3)

யோகிகளும் 
மகரிஷிகளும் ஞானிகளும் (3)


அருள்வனத்தில் என்ன இருக்கிறது?(1)

அருள்வனத்தில் அருள் சுரக்கும் 
அனைத்து தெய்வங்களும் 
குடிகொண்டு அருள் செய்கின்றன .

அனுதினமும் காலை 6 மணி முதல் 9 மணிவரை 
அங்கு வந்து தெய்வங்களை தரிசிக்கலாம். 

குருஜி ஊரில் இருந்தால்
அவரையும் தரிசிக்கலாம். 
அருள்வாக்கை
 கேட்டுபயனடையலாம். 


அருளை அள்ளித்தரும் 
அருள் வனத்தின் தெய்வங்களே போற்றி
அனைத்துலக மக்களும் ஒரே குடும்பம் என்று
அனைவரையும் ஒன்றாய் கண்டு 
அருளாசி வழங்கும் அருள்மாமணியே போற்றி




அல்லல் போக்கி ஆனந்தத்தை அள்ளித்தரும்
அருள்வனத்து கணபதியே ,தும்பிக்கையை உயர்த்தி 
ஆசி வழங்கி நம்பிக்கையை தரும் வேழமுகத்தோனே
என்றும் என் உள்ளத்தை விட்டு நீங்காதிரு, 
















நாடி வந்தவர்க்கு நன்மைகளையே அளித்திடும் உமாமகேசனின் திருவடி தாங்கும் சுயசாம்பிகை
உடனுறை நந்தியம் பெருமானே உந்தன் 
திருமணக்கோலம் கண்டார் தமக்கு தட்டாது 
திருமண பாக்கியம் அளித்திடுவாயே. 













ஞான பண்டிதனே பன்னிருவிழிகொண்டு 
பன்னிரு ராசிகளில் வலம் வரும் 
கோள்களை ஆள்பவனே 
அருட் சேய்களுக்கு  நவ கோள்களும் சுபகோள்களாய் மாற்றும் மாழ்மருகோனே.இடும்பனும் கடம்பனும் 
எமக்கு காவலாய் விளங்க அருள் செய்வாயே. 












(இன்னும் வரும்) 


இது குறித்த மேலும் பல தகவல்களுக்கு
கீழ்கண்ட வலை இணைப்பில்
விவரம் அறிந்துகொள்வீர்.
http://www.arulvanam.org/

1 comment: