Tuesday, February 26, 2013

கண்ணனை துதி மனமே
























கண்ணனை துதி மனமே 


எட்டெழுத்தில் 
உறைபவன்

பக்தியில்லார்க்கு
எட்டாதவன்

அன்பில்லாரிடம் 
ஓட்டாதவன் 

அடியார்களை 
விட்டு அகலாதவன் 

தூயவன் 
துயர் துடைப்பவன் 

ஆயன் 
அளவில்லா
இன்பம் தருபவன் 

அவன் 
திருவடிகளே சரணம் 

அவன்தான் 
அந்த கண்ணன் 
நம்மையெல்லாம் காக்க 
அவனியில்
யாதவனாய் வந்துதித்த
வைகுண்டத்தை விட்டு  
வந்த மாதவன் 


அவனை துதிப்போம்
அவனடியார்களை மதிப்போம் 

அல்லல் போக்கும் அவன்
திருநாமங்களை
சொல்லால் 
சுவைத்து பாடுவோம் 

நில்லாது ஓடும் மனதை
நிலை பெற செய்திடுவான்

நிர்மலமான பக்தியுடன் 
நித்தம் நித்தம் பாடுவோம் 
அவன் புகழை 

நிலையான
பதந்தன்னை 
நிச்சயம் 
அளித்திடுவான் 

 தி.ரா.பட்டாபிராமன் 

No comments:

Post a Comment