Friday, January 4, 2013

சமாஸ்ரயணமும் திருக்குறளும்.


சமாஸ்ரயணமும் திருக்குறளும்.

சமாஸ்ரயணம் என்றால் என்ன? 

ஸ்ரீமன் நாராயணனை வழிபடு தெய்வமாக
கொண்ட வைணவர்கள் அவனை 
உரிய முறையில் 
வழிபட தகுதி பெறுவதற்கும் 
அவனின் மந்திரமான எட்டெழுத்து மந்திரத்தை 
உரிய குருவினிடம் செவி மூலம் உபதேசம் 
பெற்று உச்சரித்து உய்வடைவதர்க்கும் 
அனுசரிக்கபட்டுவரும் ஒரு சடங்கு

அந்த சடங்கினை வைணவ மடாதிபதிகள் 
நேரடியாக செய்து வைப்பார்.

செய்துகொள்ளுபவருக்கு
இருக்க வேண்டிய தகுதி

குருவினிடம் மதிப்பும் மரியாதையும் மற்றும்
சில கொள்கைகைகளையும், சில உணவு,மற்றும் 
வாக்கு கட்டுப்பாடுகளையும் அனுசரிக்க 
தயாரான மன நிலையும், 
ஸ்ரீமன் நாராயணன் மீது
பக்தியும் இருக்க வேண்டும்

அவ்வாறு இருப்பவர்கள்
இந்த சடங்கை செய்துகொள்ளலாம் .

அவர்களுக்கு இந்த சடங்கை
செய்துகொள்ளுபவர்கள்
விஷ்ணு பக்தர்கள் ,தன்னை 
அவனுக்கு அடிமையாக்கியவர்கள்
என்பதை உணர்ந்துகொள்ளும்பொருட்டும் , 
பிறர் தெரிந்துகொள்ளும் பொருட்டும்
ஸ்ரீமன் நாராயணன் திருக்கைகளில் 
தவழும் சங்கு சக்கரத்தின் வெள்ளியினால் 
ஆன சக்கரம் மற்றும் சங்கினாலான 
இலச்சினைகள் தீயில் சுடப்பட்டு 
வலது மற்றும் இடது தோள்களில் 
வைக்கப்படும்

பிறகு. எட்டெழுத்து மந்திரம் 
வலது செவியில் குருவினால் ஓதப்படும். 
அதை தினமும் சந்தியாவந்தனம் போன்ற
தினசரி கடமைகளை செய்யும் போது 
ஜபம் செய்ய வேண்டும். 

இவ்வாறு தினமும் தவறாது 
நம்பிக்கையுடன் செய்து வந்தால் 
இவர்களின் வாழ்வே தவமாக மாறிவிடும்.
மனம் எப்போதும் ஆனந்தத்தில் மிதக்கும்.
உள்ளத்தில் அன்பு பிறகும். 
அமைதி நிலைக்கும். 

காலதூதர்கள் இவர்களில் தோள்களில்
விஷ்ணு பகவானின் இலசினைகளை 
கண்டவுடன் இவர்களுக்கு 
எந்த தீங்கும் செய்யமாட்டார்கள்.
என்பது சத்தியம்.

தினமும் இறைவனின் பெயரை 
உச்சரித்துகொண்டிருப்பதால் 
இவர்களுக்கு வேறெந்த
முயற்சிகளும் தேவையில்லை 
இறைவனை நாடி இவர்கள் எங்கும் 
அலைய வேண்டியதில்லை. 
ஏனென்றால் இறைவன் இவர்கள் 
உள்ளத்திலே காட்சி தந்துவிடுவான். 

ஆனால் அதற்குரிய கடமைகளை 
சித்த சுத்தியுடன் அனுசரிக்கவேண்டும்.
போலி வேஷம் போடுவதால் 
எந்த பயனும் இல்லை
.
அது சரி திருக்குறளுக்கும்
சமாஸ்ரயணத்திற்க்கும் .
என்ன சம்பந்தம் ?
பார்க்கலாம் 























இன்னும் வரும்.

No comments:

Post a Comment