Wednesday, December 19, 2012

ஆத்ம ஞானம்


ஆத்ம ஞானம் 

ஒரு நிறை கர்பிணியான சிங்கம்.
ஆடுகள் நிறைந்த கூட்டத்தை வேட்டையாடும்போது
ஒரு சிங்கக்குட்டியை ஈன்றுவிட்டு இறந்துவிட்டது.

அந்த சிங்க குட்டி ஆடுகளுடன் சேர்ந்துகொண்டு
ஆட்டின் குணங்களுடனே வளர்ந்துவிட்டது.
அது நன்றாக வளர்ந்த சிங்கம் போல்
ஆகிவிட்டபின்பும் ஆடுபோல் கத்திக்கொண்டும்
புல்லை தின்று கொண்டும்
காலத்தை கழித்துக்கொண்டிருந்தது .

ஒருநாள் காட்டில் இருந்த மற்றொரு சிங்கம்
அந்த ஆட்டு மந்தையின் மீது பாய்ந்தது.
அப்போது அங்கு ஆடுகளுடன் இருந்த சிங்கம்
ஆடுபோல் கத்திக்கொண்டே பயந்து ஓடியது.

வேட்டையாடவந்த சிங்கம்
அந்த சிங்கத்தை பிடித்து இழுத்துக்கொண்டுபோய்,
நீ ஆடல்ல சிங்கம், என்று தண்ணீரில்
அதன் முகத்தை காட்டி அதற்க்கு
நினைவூட்டி அதன்
உண்மைத்தன்மையை புரியவைத்தது.

இதைப்போல்தான் நாமும்
 நம்மை உடல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம்
 நாம் ஆத்மா என்று
நம்மை உணரவைக்க
சத்குருவால்தான் முடியும்

அப்படிப்பட்ட சற்குருவை அடைய
நாம் இறைவனை தினமும்
மனமுருக பிரார்த்திக்கவேண்டும்.

அவன் அருளால் ஒரு நல்ல சத்குரு
அமைந்துவிட்டால் நம்முடைய
துன்பங்களுக்கெல்லாம் ஒரு முடிவு வந்துவிடும்.

என்னதான் புத்தகங்களை எத்தனை தடவை
நாம் ஆராய்ச்சி செய்தாலும்
எப்படி ஒரு நாயால்தனக்கு தானே
 தேங்காயை உடைத்து
அதன் உள்ளே இருக்கும் தேங்காயை
 உண்ண முடியாதோ
அதைபோல்தான் ஆத்ம ஞானமும். .

2 comments:

  1. While we have the divinity inside, it is the Guru who brings the divinity outside and blooms it in splendour. It is only the Guru who can help us to move forward and attain Self-realisation. Arunagirinatar did not pray for Muruga to appear before him as God and grant his wishes. He prayed for Muruga to appear before him as Guru and impart jnana. ( "Guruvai Varuvai Arulvai Guhane...Kandar Anubhuti)

    ReplyDelete