Saturday, October 13, 2012

கல்லுக்குள்ளும் இருக்கிறான் இறைவன்


கல்லுக்குள்ளும் 
இருக்கிறான் இறைவன். 

இறை சக்தி இல்லாத
இடமே இல்லை
அது எல்லா இடத்திலும்
பொருட்களிலும் நீக்கமற
நிறைந்து பரவியிருப்பதால்
அதை பரம்பொருள் என்று அழைக்கிறோம்.

அந்த பரம்பொருளிடமிருந்துதான்
அனைத்து உலகங்களும்
அதில் உள்ள பொருட்களும்
உயிரினங்களும் வந்தன.

முடிவில் அவை அனைத்தும்
அந்த பரம்பொருளிலேயே
அயிக்கியமாகிவிடும்
பிரளய காலத்தின் போது

ஜடபொருள்களாகட்டும் அல்லது
உயிரினங்கலாகட்டும் அவைகளை
இயங்க வைப்பதும் இயங்காமல்
இருக்க வைப்பதும் அவன் செயல்தான்.
இந்த சராசரத்தில் அனைத்தும்
அணுக்களின் சேர்க்கையால் உண்டாகியவையே


அவ்வப்போது அந்த அணுக்களின் எண்ணிக்கை
கூடும் போதோ அல்லது குறையும்போதோ
அது புதிய புதிய வடிவங்களை
தோற்றுவித்துக்கொண்டிருக்கும்.



ஒவ்வொரு அணுவிலும்
அந்த பரம்பொருள் ஆத்மாவாக உள்ளது.
எனவே இந்த பிரபஞ்சத்தில்
 உயிரில்லாத பொருள் என்று எதுவுமே கிடையாது
ஏனென்றால் ஒவ்வொரு அணுவிலும்
இறைவன் இருக்கின்றான்.

நாம் எப்போதும் வடிவங்களையே
காண்கின்ற காரணத்தால் அந்த வடிவத்திற்குள்
 இருக்கும் இறைவனை நாம் அறிவதில்லை.

இறைவன் எல்லா பொருட்களிலும்
நிறைந்திருந்தாலும் அதை அறிய
சரியான அணுகுமுறை தேவை.
இல்லாவிடில் நம் எதிரே அவன்
இருந்தாலும் நம்மால் அவனை அறியமுடியாது.

எப்படி காற்றில் பலவிதமான வாயுக்கள்
கலந்திருப்பினும் நம்மால் அதற்குரிய
கருவிகளின் துணையின்றி
அறியமுடியாதோ
அதுபோல்தான் இறை சக்தியும்..

பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு கட்டப்பட்ட
கோயில்களில் உள்ள சிலைகளை மக்கள்
கல்லாகத்தான் பார்கின்றனர்.

ஆனால் அதற்குள் இறைவன்
மோன நிலையில் இருப்பதை
முயன்றால் அறியலாம்.

அதை விளக்கும் இரண்டு படங்களை
உங்களுக்காக கீழ தருகிறேன். கண்டு மகிழுங்கள்
.
முதல் படம்-சிலையாய் தோற்றமளிக்கும் படம் 

மற்ற 2 படங்கள்-மோனநிலையை
காட்டும் அதே சிலைகள்.



  

4 comments:

  1. Replies
    1. வருகைக்கும்
      கருத்துக்கும் நன்றி

      Delete
  2. Replies
    1. வருகைக்கும்
      கருத்துக்கும் நன்றி

      Delete