Saturday, September 8, 2012

கண்ணன் வரும் நேரமிது








கண்ணன் வரும் நேரமிது
உங்கள்  இதய கதவுகளை திறந்து வையுங்கள் 





அதற்க்கு முன் உங்களை அறியாமல் 
உங்கள் இதயத்தில் புகுந்துகொண்டு 
உங்களுக்கு பலவிதங்களில்
தொல்லை கொடுத்து கொண்டிருக்கும் அவநம்பிக்கைகள்,
பேராசைகள், பொறாமை, அகந்தை ,சோம்பேறித்தனம், 
வெறுப்பு,அர்த்தமற்ற கோட்பாடுகள்,
போன்ற கயவர்களை விரட்டுங்கள். 

அதில், அன்பு, பக்தி,நம்பிக்கை ,உண்மை,
நேர்மை ,பணிவு போன்ற நல்ல சிந்தனைகளை இட்டு 
தூய மனதோடு கண்ணனை எதிர்கொள்ளுங்கள்

அவன் அழகு வடிவம் கொண்டவன்.
அவன் அன்பிற்கும் தூய பக்திக்கும் அடிபணிபவன்
பார்த்தால்,நினைத்தால் ஆனந்தம் அளிப்பவன்
அவன் துணை இருந்தால் போதும்  
நம் அறியாமை நம்மை விட்டு ஓடிவிடும்
குழப்பங்கள் தீர்ந்துவிடும் 
.
நாம் பயமின்றி உலகில் வாழ வேண்டுமானால் 
அபயம் தரும் அவன் திருவடிகளை பற்றிக்கொள்ள வேண்டும்
 
அவன் ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லை
 பக்தர்களின் தூய பக்திக்குத்தான் அவன் முதலிடம் தருகிறான். 
பக்தர்கள் அவனை தேடி செல்ல வேண்டியதில்லை
பள்ளத்தை தேடி வரும் நீர்போல் தூய அன்புள்ளத்தை
தேடி அவன் வருகிறான்.
 
பிறந்ததுமுதல் வயிற்று பிழைப்பையே 
கண்ணாக கொண்டு கண்ணனை  
மறந்து பொருள் தேடுவதில் 
காலம் கழித்தது போதும்

மனிதர்களின் உயிர் எப்படி போகும், 
எங்கு போகும், எதன் மூலம் போகும் என்பதெல்லாம்
யாரும்  அறிய இயலா ரகசியம். 

எனவே உடலில் உயிர் இருக்கும்போதே,
மனம் முதலிய கருவிகள் நல்ல நிலையில் 
இருக்கும்போதே கண்ணனை நினையுங்கள் 
அவன்  அருளை பெற விழையுங்கள்.

இறந்த பிறகு ஒரு  ஆன்மா சாந்தி பெற 
மற்றவர்கள் பிரார்த்தித்தால் ஒன்றும் நடவாது. 
அதெல்லாம் ஏமாற்று வேலை.

ஒரு ஆன்மா எந்த குணங்களோடு இறக்கிறதோ 
அந்த  குணங்களை கொண்டுதான்  அதன் அடுத்த பிறவிஇருக்கும் 
நல்ல வாழ்க்கை வாழ்ந்தால் நல்ல பிறவியும் தீய வாழ்க்கை வாழ்ந்தால் 
இழி பிறவியும் தான். கிடைக்கும்  .அதனால்தான் உடலில் உயிர் நீங்குவதற்குள் தவறு செய்பவர்கள் தங்களை திருத்தி கொண்டு நல்லவர்களாக வாழ முயற்சிக்கவேண்டும் 

இறப்பு மட்டும் வாழ்நாள் முழுவதும் தீய செயல்களை செய்து தீயவனாக வாழ்ந்த ஒருவரை புனிதப்படுத்திவிடாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும் 

ஒருவன் உயிரோடு இருக்கும்போதே இறைவன் தன்னுள் உறைவதை உணர்ந்துகொண்டு நல்ல செயல்கள் செய்து நல்லவனாக வாழ்ந்து 
அமைதியையும் குறைவிலா ஆனந்தத்தையும் அனுபவிக்க முயல வேண்டும். 
 

1 comment:

  1. அருமையான கருத்துக்கள்... மிக்க நன்றி சார்...

    ReplyDelete