Saturday, September 8, 2012

கீதை சிந்தனைகள்


கீதை  சிந்தனைகள் 
நடந்தவையாவும்  நன்மைக்கே 
நடப்பவையாவும்  நன்மைக்கே 
நடக்கவிருப்பதும் நன்மைக்கே 

எதை  இழந்தாய்  ஏன்  அழுது  புலம்புகிறாய் ?
என்ன  கையில்  கொண்டு  வந்தாய் 
இவ்வுலகிற்கு  வரும்போது ?
இப்போது  என்ன  இழந்துவிட்டாய் 
இடிந்துபோய் உட்காருவதற்கு ?

நீ  எதை  உண்டாக்கினாய் 
அதன்  அழிவைக்  கண்டு  வருந்துவதற்கு ?
நீ உருவாக்க  எடுத்துக்கொண்டவை 
இங்கிருந்தே  எடுத்து  கொள்ளபட்டவைகளே 
நீ  பிறருக்கு  அளித்த  பொருட்களும் 
இங்கிருந்து  அளிக்கப்பட்ட  பொருட்களே 
இன்று  உனக்கு  சொந்தமானவை  எதுவாயினும் 
அது  நேற்று  ஒருவரின்  உடைமையாக  இருந்தது  
நாளை  வேறொருவருக்கு  சொந்தமாகிவிடும் 

உண்மை நிலையை  புரிந்துகொள் 
உள்ளத்தில்  அமைதியை  உணர்ந்துகொள் 

மாறிக்கொண்டே  இருப்பது  உலகம் 
அதுபோல்தான்  மாறிக்கொண்டே  இருப்பார்கள் 
தடுமாறும்   புத்தி  படைத்த மனிதர்களும்  

பலனை  எதிர்பாராது  கடமையை  செய்தால் 
ஏமாற்றங்கள்  என்றும்  உன்னை  அணுகாது 

யாகங்களினால்  உலகம்  நன்மை  பெறுகிறது 
ஆனால் தியாகங்களினால்தான் இவ்வுலகம்  
நிலை பெற்று வாழ்கிறது 

பொருட்களின்  மீது  பற்று  வைத்தால் 
என்றும்   துன்பம் 
பற்றுக்களை  விட்டால்  விளையும்  இன்பம் 

பிறப்பும்  இறப்பும்  அனைத்து  உயிர்களுக்கும்  இறைவன்  வகுத்த   விதி 
இதை  உணராது  அழுது  புலம்புவது  என்ன நீதி? 

சுகமும்  துக்கமும்  வாழ்வின்   அங்கம் 
ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல 

இவ்வுலகில்  தோன்றுமனைத்தும்  
மாறிக்கொண்டே  இருப்பன 
நிலையற்ற  நம்  உடல்களைபோல 
நிலையற்ற  உடலைகொண்டுதான்  நிலையான 
இறைவனை  அறிந்து  கொள்ளவேண்டும் 
மாறுகின்ற  மனதை     கொண்டுதான் 
என்றும்  மாறாத  இறைதத்துவத்தை 
புரிந்து  கொள்ள  வேண்டும் .

பிறந்ததும்  குழந்தை  அழுகிறது 
சுற்றம்  சிரித்து  மகிழ்கிறது 
அதே  குழந்தை  இறந்தால்  
அது  அமைதியாய்  இருக்கிறது 
சுற்றங்கள்  அழுகின்றன .
இதுதான்  மாயை  

மாயை  விலக 
மாயக்கண்ணனை  சரணடைவோம்                                                           
மாறாத  இன்ப  வாழ்வு  பெறுவோம் .
உள்ளம் அமைதியாய் இருந்தால்
நம்மை சுற்றியுள்ள உலகமும் நமக்கு 
அமைதியாய் தோற்றமளிக்கும்


1 comment:

  1. /// உள்ளம் அமைதியாய் இருந்தால்
    நம்மை சுற்றியுள்ள உலகமும் நமக்கு
    அமைதியாய் தோற்றமளிக்கும். ///

    100% உண்மை...

    மனம் கவர்ந்த பல கருத்துக்கள்... மனம் பாரமாக இருக்கும் போதும், பிரச்சனைகள் வரும் போதும் (௦அது இல்லாமல் இருக்குமா...? எல்லாவற்றையும் எதிர்க்கொள்வது தானே வாழ்க்கை அல்லது ஒரு சவால்...) கீதாசாரத்தை ஒருமுறை மனதில் வாசித்து விட்டால் மனம் தெளிவடைகிறது என்பது உண்மை... நன்றி சார்...

    ReplyDelete