Saturday, September 15, 2012

அகத்தியர்

அகத்தியர்


                                                                                   
                                                                                    
                                                                                       







மனமது செம்மையானால் 
மந்திரம் ஜெபிக்க வேண்டா 
என்கிறார் அகத்தியர் பெருமான்

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் 
மனம் செம்மைப்பட மந்திரம் 
ஜெபிக்க வேண்டும் என்று தெரிகிறது. 

அதே நேரத்தில் மனம் செம்மைபட்டுவிட்டால் 
மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்றும் தெரிகிறது

மனம் செம்மைப்படவேண்டும் என்றால் என்ன?

செம்மைப்படுத்துதல் என்றால் தயார் படுத்துதல் என்று பொருள்
செம்மையாக செய் என்றால் சரியாக செய் என்று பொருள் 
நிலத்தை கொத்தி  உழுது உரமிட்டு நீர் பாய்ச்சினால்
அதில் விதை விதைத்து  பயிரை வளர்த்து 
நல்ல மகசூல் காணலாம் 

மனதை திறம் உள்ளதாக  செய்ய உள்ள 
எண்ணங்களை உருவாக்கும் 
சொல்லே மந்திரம் எனப்படும்

அதனால்தான் மந்திரத்தை
விதை என்று கூறுவர்
ஒரு விதை நன்றாக முளைத்து 
வளர்ந்து பலன் தர வேண்டுமானால் 
நிலம் பண்படுத்தப்பட்டு ,நீர்வசதி,
வடிகால் வசதி,சூரிய ஒளி
வேலி ,பயிரை அழிக்கும் பூச்சிகளிடமிருந்து
 பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் ஒன்றிணையவேண்டும். 

அதைபோல்தான் நம் மனமும் வெறுப்பு, 
பொறாமை அகந்தை ,சோம்பல் 
அவநம்பிக்கை போன்ற தீய குணங்களை நீக்கி 
பொறுமை,நம்பிக்கை, விடாமுயற்சி, 
அன்பு ,பணிவு, துணிவு, போன்ற நல்ல குணங்களை கொண்டு 
முயற்சி செய்தால் மனம் நம் கட்டுபாட்டிற்குள் இருக்கும்.
நாம் நம்முடைய இலக்கை அடைய எளிதாக இருக்கும். 

எனவே மனம் என்னும் நிலத்தை 
செம்மைபடுத்தாமலே
மந்திரங்கள் ஜெபிப்பதும்
ஆன்மீக சாதனைகள் செய்வதும் பலன் தரா
என்பதை சாதகர்கள் உணரவேண்டும்.

ஆனால் இறைநாமத்தை பக்தியுடன் ஜெபித்து வந்தால்
மனதில்உள்ள அழுக்குகள் சிறிது சிறுதாக நீங்கி 
நம் மனம் நம் கட்டுப்பாட்டிற்குள் வரும்.என்பது
ஞானிகள் கண்டு அறிவித்த உண்மை.  

1 comment:

  1. அனைத்தும் உண்மை தான்... அதை தான் முயன்று செய்து கொண்டிருக்கிறேன்...

    ReplyDelete