Thursday, September 13, 2012

சிந்திக்க சில கருத்துக்கள்

சிந்திக்க சில கருத்துக்கள் 


பக்தனின் மனதில் அவநம்பிக்கையை விதைத்து 
அலைக்கழிப்பது வேடிக்கை பார்ப்பது இறைவனின்  லீலை 
ஏது வரினும் அவன் பாதங்களே கதி என்று நம்பி 
அசையா உறுதியுடன் இருப்பது பக்தனின் வேலை 

துன்பங்களும் துயரங்களும் வாழ்வில் இறைவன் 
தோற்றுவிக்கும் தடைகற்கள் அல்ல 
அவைகள் அவன் தன் பக்தனின் நம்பிக்கையின் 
உறுதியை சோதித்து நிறுத்து பார்க்கும் எடைக்கற்கள் 

கல்வி என்பது கோயிலில் குடிகொண்டிருக்கும்
மூர்த்தியை மட்டும் தெய்வமென எண்ணாது
அனைத்துயிர்களிலும் அவனை கண்டு வணங்கி
அவர்களுக்கு அன்புடன்   சேவை செய்வதே. 

நமது உண்மை எதிரிகள்  நமக்கு வெளியே இல்லை
சந்தேகமும் சஞ்சலமும்தாம் நமது உண்மை எதிரிகள்
அவர்கள் நமக்குள் பதுங்கியிருந்து நம்மை இரவும்
பகலும் நம்மை ஒவ்வொரு கணமும் துன்பத்தில் தள்ளுகிறார்கள்  

அலைபாயும் மனதை அடக்க வேண்டுமென்றால் 
வாழ்வில் அலை அலையாய் வரும் துன்பங்களிலிருந்து 
விடுபடவேண்டுமென்றால் அலைகடலின் மேல் துயிலும் 
அரங்கனின் திருவடிகளை அன்புடன் பற்றவேண்டும் 


1 comment:

  1. சில கருத்துக்கள் அல்ல...

    பல கருத்துக்கள் உள்ளன... (உங்கள் தளம்)

    ReplyDelete