Wednesday, September 12, 2012

பூமியில் எவருக்கும் இனி அடிமை செய்யோம்

பூமியில் எவருக்கும் 
இனி அடிமை செய்யோம்
பரிபூரணனுக்கே
அடிமை செய்து வாழ்வோம் 
என்று முழங்கினான் பாரதி 
{பாரதி நினைவு தினம்-11/9/2012)





















பரிபூரணனுக்கே  அடிமை  செய்து 
பல்லாயிரம் ஆண்டுகள் ஆயினும்
மங்கா புகழுடன் தெய்வமாக 
வணங்கப்பட்டு வரும்  வானர குல திலகம் 
அஞ்சனை மைந்தன், சொல்லின் செல்வன்,
பக்த சிரோமணி ,பஜ்ரங் பலி, 
வெற்றிலை மாலை அணிந்த வெற்றி நாயகன்
ராம நாமம் ஒலிக்குமிடமில்லாம் 
தன்னை மறந்து நர்த்தனமிடும் நாயகன்
ஆஞ்சநேயனின் திருப்பாதங்களை
வணங்குவோம் 
.
அரக்கர்களை அழித்தவன், தன்னை 
அண்டியவர்களை காப்பவன் 
அண்ணல் ராமபிரானின் தூதுவன்
இதயத்தில் சீதாராமனின் காட்சியை என்றும்
நிலைக்க செய்தவன் ,அதை உலகுக்கும் 
திறந்து காட்டியவன். 

பாடுவோம் அவன் புகழ்
அடைந்து மகிழ்வோம் அவனருள்.
ஜெய் மாருதி.!
ஜெய் ஸ்ரீராம் 

No comments:

Post a Comment