Sunday, August 19, 2012

இறைவன் எங்கிருக்கிறான்?

இறைவன் எங்கிருக்கிறான்? 

இறைவனை உண்மையாக தேடுபவர்களுக்கு மட்டும்
அவன் புலப்படுகிறான்

புலன்கள் மூலம் இறைவனை காண முடியுமா?

நிச்சயம் முடியாது

ஏன் ?

புலன்கள் சக்தி மிக மிக குறைந்தவை .ஒரு வரையறைக்குட்பட்டவை
அதனால் அளவிடமுடியாததும் எந்த வரைமுறைக்குள்ளும் அடக்கமுடியாத
சக்தியான இறைவனை புலன்களால் அடையமுடியாது

இறைவனை நினைத்து புலம்புவதால் இறைவனை அடையமுடியுமா?

முடியும்

எப்படி?

இறைவனை நினைத்து புலம்பும்போது மனம் மற்ற எண்ணங்கள் எதையும் சிந்திப்பது கிடையாது. இறைவனை மட்டும் சிந்திப்பதால் மனம் மற்ற சிந்தனைகளிலிருந்து விடுபட்டு இறைவனோடு ஒன்றுபடுவதால் இறைவனை அடையமுடியும் .

மயிலையில் கபாலீச்வரர் கோயில் உள்ளது .இறைவனுக்குஏன் அந்த பெயர் வந்தது?

எண் ஜாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பார்கள் .
இறைவன் நம்முடைய தலையில்தான் ஒளி வடிவமாக ஒரு புள்ளி வடிவில் இருக்கிறான்.
தலைக்கு கபாலம் என்று பொருள்.
அந்த கபாலத்தில் உறையும் ஈஸ்வரனுக்கு கபாலீஸ்வரன் என்று பெயர்.

எனவே கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கும் போது இந்த சிந்தனையோடு வணங்கினால்  நமக்குள் இறைவனை உணரும் பாக்கியம் கிடைக்கும்


1 comment:

  1. /// கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கும் போது, இந்த சிந்தனையோடு வணங்கினால், நமக்குள் இறைவனை உணரும் பாக்கியம் கிடைக்கும்... ///

    இதை பல பேர் அறிந்தால் மிகவும் நன்றாக இருக்கும்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete