Sunday, April 15, 2012

பாகவதம்-ஒரு புதிய சிந்தனை


பாகவதம்-ஒரு புதிய சிந்தனை 
பாகவதம் 
பாகவதம் என்ற நூல் பகவான் கிருஷ்ணனின் 
லீலைகளையும் , போதனைகளையும் விவரிக்கும் 
பக்தி இலக்கியம்
உலக மாயையிலே உழலும் மாந்தர்கள் 
இதை படித்து அல்லது கேடடு இன்புற்று 
மன அமைதியும் இறை கருணையும் 
பெற்று வருகின்றனர்
பாகவதம் என்ற நூல் கிருஷ்ணனை பற்றி 
விவரிப்பதால் கிருஷ்ண காவியம் அல்லது 
கிருஷ்ண லீலை அல்லது கிருஷ்ணன் கதை 
என்றுதான் பெயரிடபட்டிருக்கவேண்டும் 
ஆனால் ஏன் பாகவதம் என்று பெயரிடபட்டிருக்கிறது? 
இறைவனை நாம் அடைய முடியாமல் நமக்கு
தடையாய் இருப்பது இந்த உலக மனிதர்களிடமும் மற்ற 
பொருட்களிடமும் நாம் வைத்திருக்கும் பாசமும் பற்றும்தான்
மற்றொன்று நம்மிடமுள்ள கர்வமும் தான் என்ற அகந்தையும்தான்
பா என்றால் பாசம் 
 என்றால் கர்வம்
வதம் என்றால் அழிப்பது 

இந்த பாகவத கதையை நாம் உரிய முறையில்
புரிந்து கொண்டால் பாச வலையில் சிக்கி வாழ்நாள் முழுவதும்
துன்பப்படும் நாம் அதிலிருந்து விடுபட்டு இறைஅருளை பெறுவது திண்ணம்

அதைபோல் நம்மை கருவியாக கொண்டு 
அனைத்தையும் இறைவன் செய்துகொண்டிருக்க 
நாம்தான் அனைத்தையும் செய்கின்றோம் என்று அகந்தை கொண்டு 
நாமும் துன்பதிற்க்குள்ளாகி பிறரையும் துன்பத்திற்குள்ளாக்கும் 
கர்வத்தை அழிப்பதற்கு உதவுவது பாகவத புராணம் 

நாம் பரிபூரண சரணாகதி செய்து 
இறைவன் அருளை  அடைய வழி காட்டுவதும் பாகவத புராணம்தான்
.
எனவே இந்த எண்ணத்துடன் நாம் பாகவதத்தை நாம் அணுகினால் 
நம் பிறவி தொலையும் .நாம் புனிதர்களாகி இறைவனுடன் இரண்டற கலந்து 
நீங்கா இன்பம் அடைவது மிக எளிது

No comments:

Post a Comment