Sunday, April 29, 2012

வாழ நினைப்பவர்களே .......

வாழ நினைப்பவர்களே .......

தான் நன்றாக வாழ நினைப்பவர்களே 
அதில் தவறில்லை 

தான் மட்டும்தான் வாழ வேண்டும்
மற்றவர்கள் எப்படி  போனாலும் கவலையில்லை என்று
நினைப்பதுதான் தவறு

தானும் வாழவேண்டும் மற்றவர்களும் நன்றாக
வாழவேண்டும் என்று மனமார நினைத்து
வாழ்க்கையை தொடங்குங்கள் 
நாம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென்றால்
பிறருடைய மகிழ்ச்சியை கெடுக்காமல் இருக்க வேண்டும்

நல்லது எங்கு நடந்தாலும் பாராட்டுங்கள்
யார் அதை செய்தாலும் பாராட்டுங்கள் 
அவர்கள்  உங்கள் எதிரிகளாக இருந்தால் கூட
பிறரிடம் குறை காணாதீர்கள்
அவர்களிடம் உள்ள நிறைகளை மட்டும் 
கண்டு அதை பாராட்டுங்கள்

எப்போதும் நல்ல சொற்களையே பேசுங்கள்

சொல் என்பது நெருப்புக்கு சமமானது
அது உணவை பக்குவபடுத்தும் 
நம்மை காக்கும் 
கவனக்குறைவாக் இருந்தால் அது 
அனைத்தையும் அழித்துவிடும் 

அனைவரையும் மனம் திறந்து வாழ்த்துங்கள் 
உங்கள் வாழ்க்கை எந்த சூழ்நிலையிலும் 
மகிழ்ச்சியாக இருக்கும் 

No comments:

Post a Comment