Tuesday, March 13, 2012

உன்னை அறிந்தால்

உன்னை அறிந்தால்
நீ உன்னை அறிந்தால் 
உலகத்தில் போராடலாம் 
என்றான் கண்ணதாசன்

நீயே பிரம்மம் என்கிறது 
உபநிதடங்கள் 

நானே பிரம்மம் என்றார் ஆதி சங்கரர் 

சர்வம் பிரம்ம மயம்  என்றார் 
சதாசிவ ப்ரம்ம்ஹேந்திர  ஸ்வாமிகள்

தன்னை அறிந்து இன்புற 
ஒரு தந்திரம் சொல் நிலாவே 
என்றான் மஹாகவி பாரதி 

பிரம்மனே பிரம்மத்தை அறிந்திடாது
முருகனிடம் குட்டு வாங்கினார்
என்று புராணங்கள் சொல்கிறது
சிவபெருமானே முருகனிடம் 
பாடம் கேட்டார் பிரம்மத்தை பற்றி

அப்படியானால் பிரம்மம் என்றால் என்ன?

பிரம்மம் பற்றிய ஞானத்தை அறிந்தவன்தான்
பிராம்மணன் என்றார் மராட்டிய ஞானி 
ஞானேஸ்வர்

பிரம்மத்தை ஒருவன் அறிந்துகொண்டேன் என்று 
சொன்னால் அவன் பிரம்மத்தை அறியாதவன் என்று 
பொருள் 
ஏனெனில் வார்த்தைகளால் 
விளக்கமுடியாத ஒன்றை கண்டேன் 
என்று சொன்னால் எப்படி ஏற்றுகொள்வது என்று பொருள்

பிரம்மம் என்றால் அங்கு இங்கு எனாதபடி 
எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்த பொருள்
எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்த பொருளை 
அதில் ஒரு சிறு பகுதியான மனிதன் எவ்வாறு 
விவரிக்கமுடியும்?
கடலில் உள்ள ஒரு நீர் துளி கடலை 
குறித்தாலும் அது கடலாகுமோ? 
அதுபோல்தான் இதுவும்

எங்கும் பரந்துள்ளது பிரம்மம்
எல்லாவற்றிற்குள்ளும் புகுந்துகொண்டு
இயக்குவதும் பிரம்மம்தான் 
தோற்றுவித்த அனைத்தையும் தனக்குள் 
மறைத்துக்கொள்வதும் 
கொள்வதும் பிரம்மம்தான்

புலன்களின் உதவியால்தான் நாம் 
இந்த உலகோடு தொடர்பு கொள்கிறோம்
வெளியே செல்லும் புலன்களை உள்முகமாக
திருப்பினால் நம் கேள்விகள் அனைத்திற்கும் 
விடை கிடைக்கும்
முயற்சி செய்வோம்  

No comments:

Post a Comment