Thursday, February 23, 2012

வாட்டம் போக்கும் மருந்து

உலகில் இரவும் பகலும்
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக 
இரவும் பகலும் மாறி மாறி 
வந்து கொண்டிருக்கின்றன 
அதில் எந்த மாற்றமும் இல்லை 
அதே போல் மனிதர்கள் 
வாழ்க்கையிலும் இன்ப துன்பங்கள்
மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன 
எதுவும் நிரந்தரமாக தங்கி விடுவதில்லை
 
அதுபோல்தான் பிறப்பும் இறப்பும் 
இறந்தவர்கள் பிறக்கிறார்கள் 
பிறந்தவர்கள் இறக்கிறார்கள் 
அறிவுள்ளவர்கள் இது ஏன் என்றும்
எப்படி என்றும் சிந்திக்க 
தலைப்படுகிறார்கள்
 
உணர்வுடையவர்கள் 
பாதிக்கபடுகிறார்கள் 

இரண்டும் இல்லாதவர்கள் மற்றவர்களுக்கு 
அடிமைகளாக வாழ்க்கையை கழித்து 
மறைந்து போகிறார்கள் 

தீவிரமாக சிந்திக்கிறவனுக்கு இவை
அனைத்தையும் அந்தந்த காலக்ரமத்தில்
ஒழுங்காக ஏதோ ஒரு சக்தி நடத்தி வைக்கிறது
என்பது  புரிய வந்ததும் அதை அறிய முற்படுகிறான்

அதை அறிந்து புரிந்து கொண்டதும் அவன்
குழப்பங்கள் தீர்ந்து மனம் அமைதியடைந்து 
என்றும் மகிழ்ச்சியாக இருக்கும் 
நிலையை அடைகின்றான்

இந்த உலக பொருட்களின்மீது எந்நேரமும் 
நாட்டம் கொண்ட நாம் சிறிது நேரம் 
அந்த பரம்பொருளின் மீதும் 
நம் நாட்டத்தை செலுத்தி நம் 
வாட்டத்தை போக்கி கொள்ளுவோமாக 

2 comments:

  1. வருகைக்கும் கருத்துக்கும்
    நன்றி DD சார்
    உலகில் அனேக மக்கள் வாட்டம் போக்க
    குவார்டரில் வாட்டர் மிக்ஸ் பண்ணி
    தங்கள் வாழ்க்கையை அழித்து கொள்கிறார்களே
    அவர்களை யார் காப்பாற்றுவது?

    ReplyDelete