Friday, January 27, 2012

ஆன்ம பலம் முன்பு ஆயுத பலம் தோற்றுவிடும்

ஆன்ம  பலம் முன்பு 
ஆயுத பலம் தோற்றுவிடும்

இரண்டாம் உலக போரில் 
ஆயுத பலம் கொண்டு உலகை நாசம்
செய்த பல சர்வாதிகாரிகள் மண்ணோடு
மண்ணாக  போனதை மனித குலம்
மறக்க முடியாது

காந்தி மகானின் ஆன்ம பலம் முன்பு 
வெள்ளையரின் ஆயுத  பலம் 
தோற்றத்தை வரலாறு அறியும்

காந்தியின் வழியில் சென்ற 
தேச பக்தர்களைத்தான்
வெள்ளையர்கள்  தாக்கி
சிறையில் அடைத்தனரே 
தவிர காந்திஜியை 
ஒன்றும் செய்ய இயலவில்லை

மக்களின் கோபத்தை கட்டுபடுத்த காந்திஜியின்
உண்ணாவிரத போராட்டத்தின் மூலம் முடிந்தது 
ஏனென்றால் அவர் என்றும் பிரச்சினைகளை கண்டோ
மரணத்தைகண்டோ  பயந்து எங்கும் ஓடி ஒளியவில்லை 

அனைத்தும் இறைவன் ஆணைப்படிதான் 
இவ்வுலகில் நடைபெறும் என்பதை
 முழுமையாக நம்பியதுதான் 
அதற்க்கு காரணம்.

அவர் தனக்காக வாழவில்லை. 
நாம் நாடு அந்நிய ஆதிக்கத்திலிருந்து 
விடுபட்டு மக்கள் நன்றாக  வாழ வேண்டும் 
என்று மனபூர்வமாக பாடுபட்டார்
இன்றைய அரசியல்வாதிகள் போல் 
மக்களுக்கு சேவை செய்வதாக 
நடித்து  மக்களை ஏமாற்ற வில்லை

அனைத்து மத மக்களையும் 
பிராத்தனை மூலம் ஒன்றிணைத்து 
இந்த வெற்றியை அவர் நிகழ்த்தி  காட்டினார்
  
ஆனால் இன்று நாட்டை ஆளுபவர்கள் வெள்ளையர்கள் 
கடைபிடித்த பிரித்தாளும் சூழ்ச்சியையே கையாண்டு
மக்களிடையே விரோத போக்கை உண்டாகி 
காந்திஜி கனவு கண்ட ராம ராச்சியத்தை 
நடைமுறைபடுத்த தவறிவிட்டனர்.
மற்றும் சமூக அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் 
செயல்களையே செய்து வருகின்றனர்
 
நல்லொதொரு வாழ்க்கை நம் மக்களுக்கு அமைய
காந்திஜி கடைபிடித்து தந்த பாதையையும் 
பிரார்த்தனையும் மக்கள் அனுசரிக்க வேண்டும்

மனம் வெளுக்க  ராம நாமத்தையும் 
வாழ்வு சிறக்க கீதை காட்டும் பலன் 
எதிர்பாராது கடமையாற்றும் பண்பையும் 
அந்த இறைவன்தான்
நமக்களிக்கவேண்டும்  
 

3 comments:

  1. சினேகிதி அவர்களே
    நன்றி
    வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  2. ரத்னவேல்அவர்களே
    நன்றி
    வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  3. நல்ல, கருத்துள்ள பதிவு சார் ! பாராட்டுக்கள் ! நன்றி !

    ReplyDelete